குடும்பத்தை முதல்முறையாக விமானத்தில் அழைத்துச் சென்ற இண்டிகோ பெண் விமானி; நெகிழ்ச்சியான வைரல் வீடியோ

இண்டிகோ ஏர்லைன்ஸின் முதல் அதிகாரியான தனிஷ்கா, தான் இயக்கவிருக்கும் விமானத்தில் தனது குடும்பத்தினரை வரவேற்ற நெகிழ்ச்சியான காணொளி, இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இண்டிகோ ஏர்லைன்ஸின் முதல் அதிகாரியான தனிஷ்கா, தான் இயக்கவிருக்கும் விமானத்தில் தனது குடும்பத்தினரை வரவேற்ற நெகிழ்ச்சியான காணொளி, இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IndiGo first office flying her family

பாரம்பரிய உடையில் வந்த அவரது உறவினர் ஒருவர், பெருமையுடன் புன்னகைத்துக்கொண்டே விமானத்திற்குள் செல்கிறார்.

இண்டிகோ நிறுவனம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த அந்தக் காணொளியில், முதல் அதிகாரி தனிஷ்கா தனது குடும்பத்தினரை விமானத்தில் வரவேற்கிறார். பாரம்பரிய உடையில் வந்த அவரது உறவினர் ஒருவர், பெருமையுடன் புன்னகைத்துக்கொண்டே விமானத்திற்குள் செல்கிறார். மற்றொரு உறவினர் தனிஷ்காவை அணைக்க, தனிஷ்காவின் முகத்தில் மகிழ்ச்சியான புன்னகை தெரிகிறது. 24 விநாடிகள் கொண்ட இந்தக் காணொளியின் இறுதியில், விமானம் தரையிறங்கிய பிறகு, தனிஷ்காவின் குடும்பத்தினர் கையால் எழுதப்பட்ட குறிப்பு ஒன்றைப் பிடித்துக்கொண்டு, விமானத்திற்கு வெளியே புன்னகைக்கின்றனர்.

ஆங்கிலத்தில் படிக்க:

Advertisment

இக்காணொளியைப் பகிர்ந்த இண்டிகோ நிறுவனம், "அவர்களது கைகளைப் பிடித்துக்கொண்டு வளர்ந்தவர், இப்போது அவர்களைப் பாதுகாப்பாக ஆகாயத்தில் பறக்கச் செய்கிறார். முதல் அதிகாரி தனிஷ்கா தனது குடும்பத்தினரை விமானத்தில் வரவேற்றதைப் பாருங்கள்" என்று எழுதியுள்ளது.

இந்த வீடியோ இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இணையவாசிகள் பலரும் விமானிக்கு வாழ்த்து தெரிவித்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். "முற்றிலும் ஊக்கமளிக்கும் தருணம்! ஆர்வம் மற்றும் உறுதியானது உங்களை எந்த உயரத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதற்கான ஒரு உணர்வுபூர்வமான உதாரணம் இது. தனிஷ்காவிற்கு எனது சல்யூட்!" என்று ஒருவர் எழுதியுள்ளார். "என்ன ஒரு முழுமையான தருணம்! கைகளைப் பிடித்துக்கொண்டு வளர்ந்தவர், இப்போது அவர்களை விமானத்தில் அழைத்துச் செல்கிறார். முதல் அதிகாரி தனிஷ்காவிற்கு மிகப்பெரிய மரியாதை. பெருமையான, உணர்ச்சிபூர்வமான மற்றும் மிகவும் ஊக்கமளிக்கும் தருணம் இது," என்று மற்றொரு பயனர் பதிவிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

"மயிர்க்கூச்செறிகிறது. பெற்றோரின் அருகில் குட்டிப் படிகளாய் நடந்த காலம் முதல், அவர்களை விமானத்தில் ஏற்றிக்கொண்டு மேகங்களுக்கு மேல் பறக்கும் இந்தத் தருணம் வரை, இது ஒரு வேலைசார்ந்த மைல்கல் மட்டுமல்ல, மாறாக அன்பு, பெருமை, மற்றும் நோக்கம் நிறைந்த ஒரு முழுமையான தருணம்," என்று மற்றொரு பயனர் உணர்ச்சிபூர்வமாகப் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம், கோவாவைச் சேர்ந்த விமானி கௌரி தவலிகர், சென்னை - கோவா இண்டிகோ விமானத்தில் தனது தந்தையும், முன்னாள் கோவா அமைச்சருமான தீபக் தவலிகரை வரவேற்ற காணொளியும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த விமானத்தின் முதல் அதிகாரியாகப் பணியாற்றிய கௌரி, தனது வாழ்க்கைப் பயணத்தில் உறுதுணையாக இருந்த தனது தந்தைக்கு நன்றி தெரிவித்து, உணர்ச்சிபூர்வமான அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: