/indian-express-tamil/media/member_avatars/2025/03/15/2025-03-15t100634324z-sundar.jpg )
/indian-express-tamil/media/media_files/2025/05/09/c6cLGVs3vKxEP4c2U6xN.jpg)
ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைப்பு: நனவாகுமா ஆர்.சி.பி. கோப்பை கனவு?
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 58 லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. மீதமுள்ள 7 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற போட்டியிட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக பாகிஸ்தானில் நடைபெற்று வந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் யு.ஏ.இ-க்கு மாற்றப்பட்டுள்ளது. அதே சமயம் ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் - டெல்லி இடையிலான ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு காரணமாக போட்டி நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்து.
தற்போது போர் பதற்றம் நிலவி வருவதால் ஐ.பி.எல். தொடரை தொடர்ந்து நடத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்ய பி.சி.சி.ஐ முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பான கூட்டம் தற்போது நடைபெற்றதாகவும், அந்த கூட்டத்தில் ஐ.பி.எல். நடப்பு சீசனை நிறுத்தி வைக்க முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மீண்டும் ஐ.பி.எல். தொடர் நடைபெறும் தேதி குறித்த முடிவுகள் பின்னர் எடுக்கப்படும் என பி.சி.சி.ஐ வட்டாரங்கள் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
ஐ.பி.எல்லில் ஒரு கோப்பையை கைப்பற்ற போராடிவரும் ஆர்.சி.பி அணி நடப்பி ஐ.பி.எல் சீசனனில் 16 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் ஆர்.சி.பி., லக்னோ அணியுடன் மோத இருந்தது. எதிர்பாராதவிதமாக போர் பதற்றம் காரணமாக நடப்பு ஐ.பி.எல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், நடப்பு தொடரில் இருந்து வெளியேறிய சி.எஸ்.கே. அணி உட்பட கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்.சி.பி. அணியின் ஐ.பி.எல். கோப்பை கனவு குறித்து மீம்ஸ் போட்டு விமர்சித்து வருகின்றனர். அப்படி ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த மீம்ஸ்கள் இதோ...
ஆர்.சி.பி. கோப்பை கனவில் விளையாடிய பாகிஸ்தான்!
Rcb team to Pakistan : pic.twitter.com/Xi8NFBFVkE
— சங்கர் ரஜினி ரசிகன் (@Rajinirasigan53) May 8, 2025
2021-ல் நடந்த ஐ.பி.எல். போட்டியின்போது பார்மில் இருந்தது ஆர்.சி.பி. அணி. அப்போது, கொரோனா பரவலை காரணம் காட்டி ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. பிறகு நடந்த போட்டியில் ஆர்.சி.பி. வெளியேறியது. தற்போது, மீண்டும் நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஆர்.சி.பி. அணி முழு வீச்சில் தயாராக உள்ளது. சோதனையாக நடப்பு ஐ.பி.எல். தொடர் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
•IPL 2021 RCB were in good form- IPL postponed due to Covid and later their player went out of form
— TukTuk Academy (@TukTuk_Academy) May 9, 2025
•In IPL 2025 RCB were in good form- IPL suspended
RCB and their Luck🫡 pic.twitter.com/NbqjTo3na5
சி.எஸ்.கே. ரசிகரின் ஆனந்தம்:
எஞ்சிய IPL போட்டிகள் ரத்து - BCCI pic.twitter.com/V5buEG88eI
— James Stanly (@JamesStanly) May 9, 2025
மற்றோரு ரசிகர், பிசிசிஐக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது, இந்தியா-பாக். போர் பதட்டம் காரணமாக அதிக முறை கப் வென்ற சி.எஸ்.கே., எம்.ஐ. அணிகளுக்கு ஐ.பி.எல். கோப்பையை பகிர்ந்து வழங்கவும், இதுவரை கப் வாங்காத அணிகளை போருக்கு உதவியாக அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யுமாறு கூறி எக்ஸ் தளத்தில் சிரிப்பலை ஏற்படுத்தி உள்ளார்.
Dear BCCI,
— 🇷 🇦 🇻 🇦 🇳 🇦 🔥TVK (@Rasu4thalapathi) May 9, 2025
போர் பதட்டம் காரணமாக அதிக முறை கப் வென்ற CSK, MI அணிகளுக்கு IPL கப்பை பகிர்ந்து வழங்கவும்..
இதுவரை கப் வாங்காத அணிகளை போருக்கு உதவியாக அனுப்பி வைக்கவும்..😂🤣😂
ஆட்டோ பரிதாபங்களில் ஆட்டோ ஓட்டும் சுதாகர், பைக் டாக்சிகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி அதனை குற்றம் சாட்டுவார். அதேபோல், தொடரில் இருந்து வெளியேறிய சி.எஸ்.கே. அணி, இந்தியா-பாக். போர்ப்பதற்றத்திற்கு இடையே நடப்பு ஐ.பி.எல். தேவைதானா? என்றும், போர் நடக்கும்போது யாராவது ஐ.பி.எல். விளையாடுவார்களா? ஒரு தேச பக்தியே இல்லை என்றும் கூறி உள்ளார்.
CSK fans ~
— vijaychakkaravarthy (@drkrvcvijay) May 9, 2025
நல்லதுதாங்க… போர் நடக்கும்போது் யாராவது IPL விளயாடுவாங்களா….ஒரு தேச பக்தியே இல்ல pic.twitter.com/vgcYSOF9jP
CSK Fans right now 💛#IPL2025 pic.twitter.com/qfK6cCGS1a
— James Stanly (@JamesStanly) May 9, 2025
சி.எஸ்.கே. ரசிகரின் ஆதங்கம்:
Csk ~ “என்க்கு இல்லாத அந்த கப் வேற எவனுக்கும் இல்லடி…….” pic.twitter.com/VdqkinBJJZ
— vijaychakkaravarthy (@drkrvcvijay) May 9, 2025
ஆர்.சி.பி. அணியின் ஆதங்கம்:
— karthik (@karthik27123508) May 9, 2025
Avaru mondu pendu ellam pannitu varrathukulla Anushka Sharma kelambeerum pic.twitter.com/IeDTg3m6ij
— SiraJ_Kutty (@Siraj_Kutty25) May 9, 2025
ஆர்.சி.பி. மகளிர் அணிதான் கப் வென்றுள்ளதே போதாதா? போட்றா வெடிய!, கடவுளுக்கு கருணை இல்லை!, தெய்வீக சக்தியால் கூட ஆர்.சி.பி. அணியை ஐ.பி.எல் கோப்பையை வெல்ல வைக்க முடியாது!, ஒவ்வொரு முறையும் ஆர்.சி.பிக்கு சோதனைதான்! என்றும் ஆர்.சி.பி. அணி ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் குமுறுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.