/indian-express-tamil/media/media_files/2025/10/19/irctc-staff-punches-2025-10-19-16-04-18.jpg)
டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலைய நடைமேடையில் ஐ.ஆர்.சி.டி.சி ஊழியர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனர். நடைமேடையில் குழப்பம் ஏற்பட்டதைப் பயணிகளும் பார்வையாளர்களும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
டெல்லியின் மிகவும் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றான ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி) கேட்டரிங் ஊழியர்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து ஒருவருக்கொருவர் சண்டையிட்ட சம்பவம் அனைவர் கண் முன்பும் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சண்டையில் ஈடுபட்டவர்கள், சீருடை அணிந்த ஊழியர்கள், இவர்கள் வந்தே பாரத் விரைவு ரயிலில் உணவு வழங்கும் கேட்டரிங் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
ஊழியர்கள் ஒருவருக்கொருவர் குத்திக் கொள்வது, உதைப்பது மற்றும் குப்பைத் தொட்டிகளை வீசியெறிவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. ஆரம்பத்தில் சூடான வாக்குவாதமாகத் தொடங்கிய இது, ஒரு ஊழியர் மற்றவரை குப்பைத் தொட்டியால் தாக்கியபோது உடனடியாக பெரிய சண்டையாக மாறியது. இதில் சிலர் தங்கள் பெல்ட்டுகளை ஆயுதங்களாகவும் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
வீடியோவைப் பாருங்கள்:
IRCTC belt war at Nizamuddin railway station (At Delhi's Nizamuddin station, Kalesh broke out b/w IRCTC staff deployed on the Vande Bharat train, in which they attacked each other with dustbins, belts, and punches)
— Ghar Ke Kalesh (@gharkekalesh) October 17, 2025
pic.twitter.com/dUApuRlf6o
இந்தச் சண்டை ஒரு அற்பமான கருத்து வேறுபாட்டால் ஏற்பட்டது என்று டெல்லி காவல்துறை பின்னர் தெளிவுபடுத்தியது. ரயில்வேயில் உள்ள உணவு வழங்கும் உதவியாளர்களிடையே ரயிலுக்குள் தண்ணீர் பெட்டியை வைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையே இந்தச் சண்டைக்குக் காரணம் என்று துணை ஆணையர் (தென்கிழக்கு) ஹேமந்த் திவாரி தெரிவித்துள்ளார். பிளாட்ஃபார்ம் எண் 7-ல் இந்தப் பிரச்சினை வெடித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, ஐ.ஆர்.சி.டி.சி. ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், இந்தச் சம்பவம் மிகவும் தீவிரமாக பார்க்கப்படுவதாகக் கூறியது.
The matter has been viewed very seriously. Four staff of service provider have been detained by RPF authorities for further investigation. All four staff's ID cards have been deactivated and they have been derostered. A show cause notice for termination of contract has been… https://t.co/CbWNrDH1Br
— IRCTC (@IRCTCofficial) October 17, 2025
சண்டையில் ஈடுபட்ட சேவை வழங்குநரின் நான்கு ஊழியர்கள் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் (ஆர்.பி.எஃப்) கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
நால்வரின் அடையாள அட்டைகளும் செயல்திறன் நீக்கப்பட்டு அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சேவை வழங்குநரின் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்காக, 'விளக்கம் கேட்டு நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சேவை வழங்குநருக்கு ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தைப் பார்த்த பயணிகள் மற்றும் அங்கிருந்தோர் அதிர்ச்சியடைந்தனர். ரயில்வே போர்ட்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வந்து சண்டையிட்ட ஊழியர்களைப் பிரித்து, நிலைமையைச் சீராக்கினர். சமூக ஊடகங்களில் இந்த வீடியோவைப் பார்த்த பல இணையவாசிகள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்:
ஒரு பயனர், “இது 'பாக்பத்தின் போர்' போல் தெரிகிறது. இது மிகவும் பிரமாதமாக உள்ளது. மேலும் ஒரு விஷயம், ரயில்வே கேட்டரிங் ஊழியர்கள் தங்களை கடவுள் போல் நடத்துகிறார்கள்.” என்று கருத்துத் தெரிவித்தார்.
மற்றொருவர், “இங்கே பெல்ட் ட்ரீட்மென்ட் நடக்கிறது” என்று எழுதினார்.
மூன்றாவது நபர், “பிளாட்ஃபார்மில் காத்திருக்கும் பயணிகளுக்கு WWE (மல்யுத்த) பொழுதுபோக்கைக் கொடுத்து, அவர்களின் அனுபவத்தை மேம்படுத்த ஐ.ஆர்.சி.டி.சி. எடுத்த சிறந்த முயற்சி. சிறப்பான விஷயம் என்னவென்றால், இதற்கு கூடுதல் கட்டணம் இல்லை” என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோதல் குறித்து எந்தப் தரப்பிலும் முறையான புகார் அளிக்கப்படவில்லை என்றாலும், இந்த விவகாரம் எழுத்துப்பூர்வமாக பரஸ்பரம் தீர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.