New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/16/lg25LFz9M9ZwGXRLGIjP.jpg)
NEET UG 2025: தனது தந்தை உள்ளூர் காய்கறி சந்தையில் வேலை செய்ததாக ரோஹித் தெரிவித்தார் (பட ஆதாரம்: @physicswallah/Instagram)
NEET UG 2025: தனது தினசரி வழக்கத்தைப் பகிர்ந்துகொண்ட ரோஹித் குமார், படிப்பதற்காக தனது கடையை விட்டுவிடவில்லை, ஆனால், இரண்டையும் ஒரே நேரத்தில் கையாண்டதாகத் தெரிவித்தார்.
NEET UG 2025: தனது தந்தை உள்ளூர் காய்கறி சந்தையில் வேலை செய்ததாக ரோஹித் தெரிவித்தார் (பட ஆதாரம்: @physicswallah/Instagram)
ஜார்க்கண்டைச் சேர்ந்த போன் கவர் விற்பனையாளர் ரோஹித் குமார், நீட் தேர்வில் (NEET-UG 2025) தேர்வில் 549 மதிப்பெண்கள் பெற்று, அகில இந்திய அளவில் 12,484 இடத்தையும், மாநில அளவில் பிரிவில் 1,312 இடத்தையும் பெற்று தேர்ச்சி பெற்றதற்காகப் பாராட்டுகளைப் பெற்று வருகிறார் என்று 'புனே பல்ஸ்' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரோஹித் குமார் பகலில் போன் உபகரணங்களை விற்கும் ஒரு சிறிய வண்டியை நடத்தி வந்தார், அதே நேரத்தில் இந்தியாவின் கடினமான நுழைவுத் தேர்வுகளில் ஒன்றிற்கு இரவில் நெடுநேரம் கண்விழித்துப் படித்துத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டார்.
பிரபல பயிற்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அலக் பாண்டேயுடன் ரோஹித் குமார் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது தினசரி வழக்கத்தைப் பகிர்ந்துகொண்ட ரோஹித் குமார், படிப்பதற்காக தனது கடையை விட்டுவிடவில்லை, ஆனால் இரண்டையும் ஒரே நேரத்தில் கையாண்டதாகத் தெரிவித்தார். "நான் நாள் முழுவதும் போன் கவர்களை விற்று அதிகாலை 3 மணி வரை படித்தேன். பின்னர், காலை 7 மணிக்கு எழுந்து மீண்டும் வேலைக்குச் செல்வேன்" என்று அவர் கூறினார், பல மாதங்களாக அவர் மேற்கொண்ட தினசரி போராட்டத்தை விளக்கினார்.
மேலும், தனது தந்தை உள்ளூர் காய்கறி சந்தையில் வேலை செய்ததாகவும் அவர் தெரிவித்தார். கோவிட் தொற்றுநோய்களின் போது ஒரு மருத்துவக் கடையில் வேலை செய்த பிறகுதான் மருத்துவத் துறையில் ஒரு வாழ்க்கையைத் தொடர ஆர்வம் ஏற்பட்டதாக அவர் கூறினார். தனது 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்குப் பிறகு, நீட் தேர்வில் கவனம் செலுத்துவதற்காக அவர் கல்லூரியில் இருந்து விலகினார்.
மனதைத் தொடும் விதமாக, பாண்டே வைரல் வீடியோவில் ரோஹித் குமாருக்கு ஒரு டாக்டர் கோட்டைப் பரிசாக அளித்தார்.
வீடியோவைப் பாருங்கள்:
இந்த வீடியோ விரைவில் பரவி, பல சமூக ஊடகப் பயனர்கள் ரோஹித் குமாரின் குறிப்பிடத்தக்க சாதனையைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். "அவர் கண்கள் அவரது கடின உழைப்பைக் காட்டுகிறது," என்று ஒரு பயனர் எழுதினார். "கடின உழைப்பு பலன் தரும்," என்று மற்றொரு பயனர் கருத்து தெரிவித்தார்.
"அவர் என் நகரத்தைச் சேர்ந்தவர்…. உண்மையில் வெற்றி பெற்ற ஒரு உத்வேகமான பயணம்," என்று ஒரு மூன்றாவது பயனர் எதிர்வினையாற்றினார்.
இந்த ஆண்டு, ராஜஸ்தானைச் சேர்ந்த மகேஷ் குமார் நீட் தேர்வில் 99.9999547 சதவிகிதம் பெற்று, பொதுப் பிரிவில் அகில இந்திய அளவில் 1 இடத்தைப் பிடித்தார். டெல்லி என்.சி.டியைச் சேர்ந்த அவிகா அகர்வால், 99.9996832 சதவிகிதம் பெற்று பெண் தேர்வர்களில் முதலிடம் பிடித்தார், மேலும், நீட் தேர்வில் 5 ஆம் இடத்தைப் பிடித்தார்.
இதற்கிடையில், NEET UG 2025 தேர்வில் போட்டியிடுபவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் ஏமாற்றியதற்காக மகாராஷ்டிராவைச் சேர்ந்த இரண்டு பேரை மத்திய புலனாய்வுப் பிரிவு கைது செய்தது. அவர்கள் மதிப்பெண்களைக் கையாள முடியும் என்று கூறி, ஒரு வேட்பாளருக்கு 90 லட்சம் ரூபாய் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.