கோவையில் உலா வரும் ரோலக்ஸ் காட்டு யானையைப் பிடிக்க வந்த கபில்தேவ் கும்கி: வைரல் வீடியோ

ரோலக்ஸ் காட்டு யானையை கட்டுப்படுத்த டாப் சிலிப் யானைகள் முகாமில் இருந்து 2 கும்கி யானைகள் கடந்த சனிக்கிழமை வரவழைக்கப்பட்டது.

ரோலக்ஸ் காட்டு யானையை கட்டுப்படுத்த டாப் சிலிப் யானைகள் முகாமில் இருந்து 2 கும்கி யானைகள் கடந்த சனிக்கிழமை வரவழைக்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
Elephant 3

ரோலக்ஸ் யானையை பிடிக்க கபில்தேவ் என்ற மேலும் ஒரு கும்கி யானை வால்பாறை யானை முகாமில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளது.

கோவை, தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார விவசாய நிலங்களுக்குள் புகுந்து, விளைப்பொருட்களை  சேதப்படுத்தி வரும் காட்டு யானையை பிடிக்க மேலும் ஒரு கும்கி யானை புதன்கிழமை  வரவழைக்கப்பட்டது.

Advertisment

கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் ரோலக்ஸ் என்ற கட்டு யானை அங்குள்ள விளை நிலங்களை சேதப்படுத்தி அச்சுறுத்தி வருகிறது. 

தொடர்ந்து விவசாயிகளை அச்சுறுத்தி வரும் ரோலக்ஸ் காட்டு யானையை பிடித்து வேறு வனப்பகுதியில் விடுவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். 

இதையடுத்து, ரோலக்ஸ் காட்டு யானையை கட்டுப்படுத்த டாப் சிலிப் யானைகள் முகாமில் இருந்து 2 கும்கி யானைகள் கடந்த சனிக்கிழமை  வரவழைக்கப்பட்டது.

Advertisment
Advertisements

இதனிடையே, யானையைப்  பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதனால், மதுக்கரை வெள்ளப்பதி வனப்பகுதியில் உள்ள யானையை தாளியூர் அருகே விரட்டும் பணிகள் நடந்து வருகிறது. 

இந்நிலையில், ரோலக்ஸ் யானையை பிடிக்க கபில்தேவ் என்ற மேலும் ஒரு கும்கி யானை வால்பாறை யானை முகாமில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளது. 

தொடர்ந்து காட்டு யானையை வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். 

விரைவில் தாளியூர் வனப்பகுதியில் வைத்து யானைக்கு மயக்க ஊசி செலுத்தி வேறு பகுதிக்கு யானை மாற்றப்பட உள்ளது.

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: