New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/21/3IGDFUO90BLQchl44VXG.jpg)
கர்நாடகாவில் பொதுத்தேர்வு எழுதியிஅ மாணவன் ஒருவன் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், பெலகாவியில் பொதுத்தேர்வு விடைத்தாளுடன் ரூ.500 நோட்டு வைத்து ஆசிரியர்களுக்கு லஞ்சம் கொடுத்த 10-ம் வகுப்பு மாணவனின் செயல் விடைத் தாள் திருத்திய ஆசிரியர்களைத் திகைக்க வைத்துள்ளது.
கர்நாடகாவில் பொதுத்தேர்வு எழுதியிஅ மாணவன் ஒருவன் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், பெலகாவியில் பொதுத்தேர்வு விடைத்தாளுடன் ரூ.500 நோட்டு வைத்து ஆசிரியர்களுக்கு லஞ்சம் கொடுத்த 10-ம் வகுப்பு மாணவனின் செயல் விடைத் தாள் திருத்திய ஆசிரியர்களைத் திகைக்க வைத்துள்ளது.
கர்நாடகாவில் பொதுத்தேர்வு எழுதியிஅ மாணவன் ஒருவன் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேர்வு எழுதிய தாள்களின் நடுவே ரூ.500 நோட்டுகளை வைத்து, ஆசிரியர்களுக்கு லஞ்சம் கொடுத்துள்ளான் அந்த மாணவன். அதுமட்டுமல்லாமல், அந்த நோட்டுகளுக்கு கீழே அவன் எழுதியிருந்த வாசகங்கள் மேலும் விந்தையாக உள்ளன.
“இந்த 500 ரூபாயை வைத்துக் கொண்டு என்னை பாஸ் பண்ணி விடுங்கள்” என்று பொதுத் தேர்வு விடைத்தாளில் எழுதியிருக்கிறான். இன்னொரு தாளில் இன்னும் ஒரு படி மேலே போய், “தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் என் காதலைச் சொல்ல முடியும்; என் காதலே உங்கள் கையில்தான் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளான்.
இந்த வினோதமான லஞ்ச முயற்சியும், காதலை வெளிப்படுத்தும் அவசரமும் ஆசிரியர்களை என்ன செய்ய வைத்திருக்கும் என்று தெரியவில்லை. ஒருவேளை, அந்த மாணவனின் இந்த துணிச்சலான செயல் வியப்பை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், பொதுத்தேர்வில் நேர்மையாக இருப்பதுதான் சரியான வழி என்பதை அவன் எப்போது உணர்வார்கள்?
இந்த சம்பவம், தேர்வு முறையின் மீதும், இன்றைய இளைஞர்களின் மனநிலை மீதும் பல கேள்விகளை எழுப்புகிறது. மதிப்பெண்களுக்காக இப்படி குறுக்கு வழிகளை நாடுவது சரியா? காதலை வெல்வதற்கு தேர்வு ஒரு தடையா? பொறுத்திருந்து பார்ப்போம், இந்த மாணவனின் வினோதமான முயற்சிக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.