‘வயதோ சூழ்நிலைகளோ தடை இல்லை: கேரள அருட்சகோதரி தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி

தனது இளம் வயதில் தேசிய அளவிலான தடை தாண்டும் ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்த அருட்சகோதரி சபீனா, மாநில மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் 55 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் முதலிடம் பிடித்தார்.

தனது இளம் வயதில் தேசிய அளவிலான தடை தாண்டும் ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்த அருட்சகோதரி சபீனா, மாநில மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் 55 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் முதலிடம் பிடித்தார்.

author-image
WebDesk
New Update
Kerala nun

கேரள கிறிஸ்துவ அருட்சகோதரி மத உடை அணிந்து பந்தயத்தில் வெற்றி பெற்றார். காசர்கோடு என்னப்பாராவைச் சேர்ந்த அருட்சகோதரி சபீனா 1993-ல் வயநாட்டிற்கு குடிபெயர்ந்தார்.

கிறிஸ்தவ அருட்சகோதரிகளுக்கான மத உடையில் அடக்கமாக ஆடை அணிந்து, வெறும் காலுடன் தொடக்கக் கோட்டில் நின்ற 55 வயதான கேரள அருட்சகோதரி சபீனா, மாநில அளவிலான தடகளப் போட்டியில் மின்னல் வேகத்தில் ஓடி, தடையைத் தாண்டியபோது பார்வையாளர்கள் வியந்து நின்றனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

தனது பதின்ம வயதில் தேசிய அளவிலான தடை தாண்டும் ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்த அருட்சகோதரி சபீனா, போட்டிப் பந்தயங்களில் இருந்து விலகி பல ஆண்டுகளுக்குப் பிறகு, மாநில மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் 55-க்கும் மேற்பட்டோர் பிரிவில் முதலிடம் பிடித்தார். அவர் இலக்குக் கோட்டைத் தாண்டியபோது, ​​அவரது குறிப்பிடத்தக்க செயல்திறனைக் கொண்டாடும் வகையில் கூட்டம் உற்சாகமாக ஆர்ப்பரித்தது என்று என்.டி.டிவி செய்தி வெளியிட்டுள்ளது.

முதலில் காசர்கோடு, எண்ணப்பாராவைச் சேர்ந்த அருட்சகோதரி சபீனா, 1993-ல் வயநாடுக்கு இடம் பெயர்ந்தார். ஒன்பதாம் வகுப்பில் தேசிய தடை தாண்டும் ஓட்டப்பந்தய நிகழ்வுகளில் பங்கேற்றதன் மூலம் அவரது தடகளப் பயணம் தொடங்கியது. பல்கலைக்கழக அளவிலான போட்டிகளிலும் கல்லூரி ஆண்டுகளில் அவர் தொடர்ந்து பிரகாசித்தார். பின்னர், அவரது கவனம் கற்பித்தலை நோக்கி மாறியதால், அவர் போட்டி விளையாட்டுகளில் குறைவாகவே பங்கேற்றார். இப்போது அவர் ஒரு உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். மேலும், மாணவர்களுடன் தடகளத்தின் மீதான தனது ஆர்வத்தைத் தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறார் என்று அச்செய்தி கூறியது.

வீடியோவைப் பாருங்கள்:

Advertisment
Advertisements

இந்த ஓட்டப் பந்தயம், அவர் ஓய்வு பெறுவதற்கு முன் கலந்துகொண்ட இறுதிப் போட்டி ஆகும். “அடுத்த மார்ச் மாதம், நான் உடற்கல்வி ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறேன். ஓய்வு பெறுவதற்கு முன் கடைசியாக ஒருமுறை போட்டியிட விரும்பினேன், அதனால்தான் மாநில மாஸ்டர்ஸ் போட்டியில் கலந்துகொண்டேன்” என்று அவர் விளக்கினார்.

அமைச்சர் பாராட்டு: 'மன உறுதியின் அடையாளம்'

கேரளக் கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி அருட்சகோதரியின் வெற்றியைப் பாராட்டினார், இவர் "மன உறுதியின் அடையாளம்" என்று வர்ணித்தார். சமூக ஊடகங்களில் அவரது புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர், அருட்சகோதரி சபீனாவின் வெற்றி "வயதோ சூழ்நிலைகளோ எந்தவொரு இலக்கிற்கும் தடை இல்லை" என்பதை நிரூபிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். அவரது அர்ப்பணிப்பு அவரது மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிப்பதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

அவர் மேலும் எழுதியதாவது: “55 வயதாக இருந்தபோதிலும், aஅருட்சகோதரி உடையில் போட்டியில் பெற்ற இந்த வெற்றி, மன உறுதியின் அடையாளமாகும். எந்தவொரு இலக்கிற்கும் வயதோ சூழ்நிலைகளோ தடை இல்லை என்பதை அருட்சகோதரி தனது சொந்த வாழ்க்கையின் மூலம் நிரூபித்துள்ளார். இந்த ஆசிரியையின் அர்ப்பணிப்பு அவரது மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் சமமான உத்வேகமாகும். அருட்சகோதரி சபீனாவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: