மும்பையில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கி நடனம் ஆடிய இளைஞர்களுக்கு நூதன தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
கிகி சேலஞ்ச் :
கடந்த சில மாதங்களாக சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ தான் கிகி சேலஞ்ச். ஓடும் காரில் இருந்து இறங்கி நடனாடி அந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் வெளியிட வேண்டும். இது தான் கிகி சேலஞ்ச்.
இந்த சேலஞ்சை இளைஞர்கள்,பிரபலங்கள் பலரும் ஆர்வத்துட செய்து வருகின்றனர். ஆனால் உண்மையில் இந்த சேலஞில் இருக்கும் ஆபத்து பலருக்கும் தெரிவதில்லை. எனவேம் இந்த சேலஞ்சில் ஈடுப்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்திருந்தனர்.
மேலும், பொது இடங்களில் கிகி சேலஞ்ச் செய்வோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு வந்தனர். இந்நிலையில் மும்பையில் இளைஞர்கள் 3 பேர் ஓடும் ரயிலிருந்து இறங்கி கிகி பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர்.
நடனம் ஆடிய இளைஞர்கள்
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த நிசாந்த், துருவ், சியாம் ஆகிய மூவரும் ஒன்றப்பின் ஒருவராக நடனம் ஆடி அதை ஃபோனில் பதிவு செய்துள்ளனர். இதைப்பார்த்த காவல் துறையினர் அந்த மூவரையும் கைது ரெயில்வே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிகி நடனம் ஆடி அந்த வீடியோ ஃபேஸ்புக்கில் பகிர இவ்வாறு நடந்துக் கொண்டதாக கூறியுள்ளனர். இதைக் கேட்டு நீதிபதி அந்த இளைஞர்களுக்கு நூதன தண்டனையாக 3 நாட்கள் ரெயில் நிலையத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று தீர்பளித்தார்.
காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், ஓடும் ரெயிலில் சாகசங்களில் ஈடுபடுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். என்று தெரிவித்தார்.
அத்துடன் விழிப்புணர்வு வீடியோவை மூவரும் தங்களது ஃபேஸ்புக்கில் பகிர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.