New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/08/CzJ90R44unU1S43J3PfJ.jpg)
Coimbatore
அப்போது எதிர்பாராத விதமாக, அந்தப் பாம்பின் தலை, வழியில் கிடந்த பிளாஸ்டிக் கவரில் சிக்கிக் கொண்டது.
Coimbatore
கோவை மாநகரின் முக்கிய அடையாளங்களான மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம், நீதிமன்றம், ரயில் நிலையம் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் இன்று பரபரப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், அலுவலர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வந்து செல்லும் இப்பகுதியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் இடையே உள்ள தாமஸ் கிளப் பாதையில், இன்று பிற்பகல் சுமார் 9 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது.
கோவைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் இடையே உள்ள தாமஸ் கிளப் பாதையில், இன்று பிற்பகல் சுமார் 9 அடி நீளமுள்ள நாகப்பாம்பு எதிர்பாராத விதமாக வழியில் கிடந்த பிளாஸ்டிக் கவரில் சிக்கிக் கொண்டது pic.twitter.com/AJOg4pmKXw
— Indian Express Tamil (@IeTamil) May 8, 2025
அப்போது எதிர்பாராத விதமாக, அந்தப் பாம்பின் தலை, வழியில் கிடந்த பிளாஸ்டிக் கவரில் சிக்கிக் கொண்டது. செய்வதறியாது தவித்த அந்த நாகம், சிறிது நேரம் போராடிய பின்னர் லாவகமாக தனது தலையை வெளியே எடுத்து பத்திரமாக அங்கிருந்து சென்றது.
இந்த அசாதாரண காட்சியை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தலையை மாட்டிக்கொண்டு பரிதவித்த பாம்பு, சிறிது நேரத்தில் தானாகவே அதிலிருந்து தப்பிச் சென்ற காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.