New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/10/GGEUfDMhtfPXaZ5IQCCE.jpg)
கோவையில் சாலை விபத்தில் முதியவர் தூக்கிவிசப்படும் காட்சி
கோவையில் சாலை விபத்தில் முதியவர் தூக்கிவிசப்படும் காட்சி
மேட்டுப்பாளையம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பயணம் செய்து வருகின்றன. குறிப்பாக கோவையில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு செல்ல இச்சாலையை பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் சமீப காலமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், தனியார் வாகனங்கள் அசுர வேகத்தில் இயக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்து வருகிறது. இதனிடையே நேற்று மதியம் காரமடை அருகே உள்ள டீச்சர்ஸ் காலனி அருகே முதியவர் ஒருவர் சாலையை கவனக்குறைவாக கடக்க முயன்றுள்ளார்.
அப்போது,காரமடையில் இருந்து அதிவேகமாக மேட்டுப்பாளையம் நோக்கிச்சென்ற கார் அவர் மீது பயங்கரமாக மோதியது. காரின் டிரைவர் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிறுத்தாமல் சென்றுள்ளார்.
இந்த விபத்தில் முதியவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கவனக்குறைவாக சாலையை கடந்த முதியவர்; கார் மோதி தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள்#Coimbatore #roadaccident pic.twitter.com/FBIePv3QeV
— Indian Express Tamil (@IeTamil) February 10, 2025
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக முதியவர் காயங்களுடன் உயிர்த்தப்பினார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காரமடை போலீசார் கார் மோதி காயமடைந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் முதியவர் மீது கார் மோதி தூக்கி வீசப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.