Advertisment

கோயில் திருவிழாவில் இளையராஜா பாடலை இசைத்த இசைக் கலைஞர்கள்: காப்பி ரைட்ஸ் சிக்கல் ஏற்படுமா?

கோவில் திருவிழாவில் பம்பை வெர்ஷனில் இளையராஜாவின் மாங்கியிலே, பூங்குயிலே பாடலை ஒரு குழுவினர் இசைத்துள்ளனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவில் திருவிழாவில் பம்பை வெர்ஷனில் இளையராஜாவின் மாங்கியிலே, பூங்குயிலே பாடலை ஒரு குழுவினர் இசைத்துள்ளனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தான் இசையமைத்த பாடலை மற்றவர்கள், அவரது அனுமதியின்றி பயன்படுத்த கூடாது என்பதில் இசையமைப்பாளர் இளையராஜா மிகவும் கவனமாக இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான மஞ்ஜூமல் பாய்ஸ் படத்தில் இடம்பெற்ற தனது பாடலை பயன்படுத்தியதற்காக படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளர்.

இது தொடர்பாக அனுப்பிய நோட்டீஸில் “ பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் இளையராஜாவுக்கு இந்த பாடலின் முழு உரிமை உள்ளது. அவரிடம் அனுமதி பெற்று விட்டு இந்த பாடலை பயன்படுத்தியிருக்க வேண்டும். அல்லது இந்த பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும். பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். இல்லை என்றால் பதிப்புரிமையை ஏற்கனவே மீறியதாக, உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளாவில், உள்ள ஒரு கோவில் திருவிழாவில், மேளம் வாசிகும் குழுவினர், ஒன்றாக சேர்ந்து பம்பை வெர்ஷனில் மாங்கியிலே, பூங்குயிலே பாடலை வாசித்துள்ளனர். அந்த விழாவில் பங்கேற்ற அனைவரும் மிகவும் கொண்டாட்டமாக இதை கேட்டு மகிழ்ந்துள்ளனர். இருப்பினும் இந்த காப்பி ரைல்ஸ் சிக்கலில் இவர்களும் சிக்குவார்கள் என்று நெட்டீசன்கள் கமெண்ட்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment