கேரளா சித்தூரில் ரன்னிங்கில் தீப்பிடித்து எரிந்த கே.எஸ்.ஆர்.டி.சி பஸ்; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

கேரளா மாநிலம் கொச்சி சித்தூரில் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர், ஆனால் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது.

கேரளா மாநிலம் கொச்சி சித்தூரில் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர், ஆனால் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது.

author-image
WebDesk
New Update
fire bus 3

கேரளா மாநிலம் சித்தூரில் ஓடி கொண்டிருந்த கே.எஸ்.ஆர்.டி.சி பஸ் தீப்பிடித்து எரிந்தது.

கேரளா மாநிலம் கொச்சி சித்தூரில் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர், ஆனால் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது.

Advertisment

எர்ணாகுளத்தில் இருந்து தொடுபுழா நோக்கி சென்ற பேருந்து மதியம் சித்தூர் அருகே வந்த போது பஸ்சின் அடியில் இருந்து புகை வந்தது.

பேருந்தில் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில் ஊழியர்கள் பயணிகளை உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றி உள்ளனர்.

சற்று நேரத்தில் பேருந்தில் இருந்து தீ மழமழவென்று எரிய தொடங்கி உள்ளது.தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தீயணைப்பு படையினர் தீயை அணைத்த போதிலும் பஸ் எரிந்து நாசமானது. பயணிகள் உடனடியாக வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: