New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/03/272iOByJzzQhYwCCngbm.jpg)
புதுச்சேரி பழைய துறைமுகம் பகுதி அருகே உள்ள கடற்கரை ஓரத்தில் அளவில் மிகப்பெரிய கடல் ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருந்தது.
புதுச்சேரி பழைய துறைமுகம் பகுதி அருகே உள்ள கடற்கரை ஓரத்தில் அளவில் மிகப்பெரிய கடல் ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருந்தது.
புதுச்சேரி பழைய துறைமுகம் அருகே கடற்கரை ஓரத்தில் பெரிய கடல் ஆமை ஒன்று இறந்து கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் தற்போது காலநிலை மாற்றங்கள் பல வகையாக மாறுபட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக புதுச்சேரி கடல் சற்று சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் நேற்று இரவு புதுச்சேரி பழைய துறைமுகம் பகுதி அருகே உள்ள கடற்கரை ஓரத்தில் அளவில் மிகப்பெரிய கடல் ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருந்தது.
வீடியோ: இறந்த நிலையில் கரை ஒதுங்கி பெரிய கடல் ஆமை... புதுச்சேரி மக்கள் அதிர்ச்சி!#viralvideo pic.twitter.com/2dd9g9snNq
— Indian Express Tamil (@IeTamil) March 3, 2025
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த காவல்துறையினர் இறந்து கிடந்த ஆமை குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் இறந்த ஆமை குறித்து விசாரணை நடத்தினர்.
திடீரென புதுச்சேரி கடற்கரையில் ஆமை இறந்து கரை ஒதுங்கிய சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.