வால்பாறை ரொட்டிக்கடை பகுதியில் வீட்டருகே ஆக்ரோஷமாக பாய்ந்து சென்ற சிறுத்தை; பொதுமக்கள் அச்சம்: வைரல் வீடியோ

வால்பாறை - ரொட்டிக்கடை பகுதியில் வீட்டருகே ஆக்ரோஷத்துடன் பாய்ந்து சென்ற சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறை அதிகாரிகள் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நுழைவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை - ரொட்டிக்கடை பகுதியில் வீட்டருகே ஆக்ரோஷத்துடன் பாய்ந்து சென்ற சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறை அதிகாரிகள் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நுழைவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
CCTV

வால்பாறை - ரொட்டிக்கடை பகுதியில் வீட்டருகே ஆக்ரோஷத்துடன் பாய்ந்து சென்ற சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம்  வால்பாறை அருகே  ரொட்டிக்கடை உயர்நிலைப்  பள்ளிக்கு மேற்புறம் குடியிருந்து வருபவர் சிவக்குமார் சத்யா. இவரின் மகன் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் வீட்டின் முன்புறம் விளையாடிக் கொண்டிருந்தபோது, அப்போது பலத்த கத்தலுடன் நாய் குரைக்கும் சத்தம் கேட்டுள்ளது. 

Advertisment

அதேசமயம் தனது மகன் அலறியடித்து கொண்டு வீட்டிற்குள் ஓடி சென்றுள்ளான். இதையறிந்த வீட்டிலிருந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து வெளியே சென்று பார்த்துள்ளனர். அப்போது நாய்கள் மட்டும் சத்தம்போட்டு கொண்டிருக்கவே  என்னவாக இருக்கும் என்று நினைத்தவாறே சிறுவனின் தந்தை செல்வக்குமார் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆராய்ந்து பார்த்துள்ளார்.

அப்போது வீட்டருகே  பதுங்கி இருந்த பெரிய சிறுத்தை ஒன்று நாய் குரைத்த சத்தத்தால் ஆத்திரமடைந்து ஆக்ரோஷத்துடன் பாய்ந்து வந்து பின்பு திரும்பி சென்றது பதிவாகி இருந்தது. அக்காட்சியை பார்த்தது முதல் அப்பகுதி பொதுமக்களும் பெரும் அச்சத்துடனே இருந்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நுழைவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: