முள்ளம்பன்றி மீது தாக்குதல்... வாய், கால்களில் அம்பு போல குத்திய முள்கள்: பாவமான சிறுத்தை: வைரல் வீடியோ

முள்ளம்பன்றியைத் தாக்கப் போய் பரிதாபமான சிறுத்தை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ 2.35 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது.

முள்ளம்பன்றியைத் தாக்கப் போய் பரிதாபமான சிறுத்தை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ 2.35 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது.

author-image
WebDesk
New Update
leopard porcupine

சிறுத்தை முள்ளம்பன்றியைத் தாக்கும்போது, பார்ப்பவர்கள் முதலில் முள்ளம்பன்றிக்காகப் பரிதாபப்படுகிறார்கள். ஆனால், இறுதியில் சிறுத்தைதான் பாவம்.

வனவிலங்குகளில் வேகமாக பாய்ந்து வேட்டையாடுவதில் வலிமையான சிறுத்தை ஒரு முள்ளம்பன்றியைத் தாக்கி வேட்டையாட முயன்றபோது, வாய், கால்களில் எல்லாம் அம்பு போல முள்ளம்பன்றியின் முட்கள் குத்தி வலியுடன் அதை எடுக்கும் பாவமான சிறுத்தையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

சிறுத்தை மிகவும் வேகமாக ஓடக்கூடியது. தனது இரையைப் பிடிக்க மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது. சிறுத்தை தனது வேட்டையாடும் திறன், வலிமை மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் திறன் ஆகியவற்றால் இயற்கையின் மிகச்சிறந்த வேட்டைக்காரனாக திகழ்கிறது. ஆனால், அப்படியாகப்பட்ட சிறுத்தைக்கே ஒரு முள்ளம்பன்றி தண்ணி காட்டியது மட்டுமல்ல, வாய் கால்களில் எல்லாம் முட்களால் குத்துப்பட்டு வலியுடன் வேதனைப்பட வைத்துவிட்டது.

சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக் கணக்கான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அவற்றில், கணிசமான வீடியோக்கள் வனவிலங்குகளைப் பற்றிய வீடியோக்கள் அந்த வகையில், சிறுத்தை ஒன்று முள்ளம்பன்றியைத் தாக்கி வேட்டையாட முயன்றபோது, வாய், கால்களில் எல்லாம் அம்பு போல முள்ளம்பன்றியின் முட்கள் குத்தி வலியுடன் அதை எடுக்கும் பாவமான சிறுத்தையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment
Advertisements

புரூடல் நேச்சர் (@BrutaINature1) என்கிற எக்ஸ் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் சிறுத்தை ஒன்று முள்ளம்பன்றியைத் தாக்கி வேட்டையாட முயன்றபோது, வாய், கால்களில் எல்லாம் அம்பு போல முள்ளம்பன்றியின் முட்கள் குத்தி வலியுடன் அதை எடுக்கிறது.

சிறுத்தை முள்ளம்பன்றியைத் தாக்கும்போது, பார்ப்பவர்கள் முதலில் முள்ளம்பன்றிக்காகப் பரிதாபப்படுகிறார்கள். ஆனால், அந்த முள்ளம்பன்றி தப்பிவிட்ட பிறகு, முள்ளம்பன்றியின் உடலில் உள்ள முட்கள் குத்தி வலியுடன் சிறுத்தை அதை எடுப்பதைப் பார்க்கும்போது பாவம் சிறுத்தை என்று பரிதாபப்படுகிறார்கள். 

இந்த முள்ளம்பன்றிகள் தங்கள் உடலில் உள்ள கூர்மையான முள்களைப் பயன்படுத்தி ஆபத்து ஏற்படும்போது, விலங்குகள் தாக்கும்போது தற்காத்துக்கொள்கின்றன. 

முள்ளம்பன்றியைத் தாக்கப் போய் பரிதாபமான சிறுத்தை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ 2.35 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. இயற்கையின் விசித்திரப் படைப்பு மற்றும் வனவிலங்குகள் குறித்து நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: