ஒரு கம்ப்ளைண்ட் கொடுக்கணும் சார்... காவல் நிலையத்துக்குள் நுழைந்த சிறுத்தை: வைரல் வீடியோ

நீலகிரி மாவட்டத்தில் ஒரு காவல் நிலையத்துக்குள் ஒரு சிறுத்தை நுழைந்து உலா வந்த சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவல் நிலையத்துக்குள் சிறுத்தை நுழைந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், நகைச்சுவையாக கமேண்ட் செய்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஒரு காவல் நிலையத்துக்குள் ஒரு சிறுத்தை நுழைந்து உலா வந்த சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவல் நிலையத்துக்குள் சிறுத்தை நுழைந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், நகைச்சுவையாக கமேண்ட் செய்து வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
leopard

இந்ந வீடியோவின் ஆரம்பத்தில் சிறுத்தை அமைதியாக காவல் நிலையத்துக்குள் புகுந்து ஆராய்கிறது, அதன் அசாதாரண சூழலால் எந்தவித தொந்தரவும் இல்லாமல் இருக்கிறது. (Image Source: @supriyasahuias/X)

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நடுவட்டம் காவல் நிலையத்தில் வழக்கமான பணி நேரத்தின்போது ஒரு சிறுத்தை சாதாரணமாக காவல் நிலைய வளாகத்திற்குள் நுழைந்ததால், பணியில் இருந்த ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்:

ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள இந்த வைரல் வீடியோவில், அந்த சிறுத்தை காவல் நிலையத்தின் பல்வேறு அறைகளை சுற்றிப் பார்த்து, ஒவ்வொன்றையும் ஆய்வு செய்தபின் அமைதியாக வெளியேறுகிறது. வீடியோவின் ஆரம்பத்தில் சிறுத்தை கட்டிடத்தை ஆராய்வது பதிவாகியுள்ளது, அது அந்த சூழலால் எந்தவித பாதிப்பும் அடையவில்லை.

சிறுத்தை ஒரு அறையை விட்டு வெளியேறிய சிறிது நேரத்திலேயே, ஒரு போலீஸ்காரர் கதவுக்குப் பின்னால் இருந்து எட்டிப்பார்த்து அந்த விலங்கு இன்னும் இருக்கிறதா என்று பார்க்கிறார். அமைதியாக இருக்க முயன்ற அந்த அதிகாரி, சிறிது நேரம் வெளியே வந்து சிறுத்தை போய்விட்டதை உறுதிசெய்துவிட்டு உள்ளே செல்கிறார். வெளிப்படையான பதற்றத்தில், அவர் கதவை பூட்ட முடியாமல் திணறுகிறார், பல முறை முயற்சி செய்தபின் இறுதியாக பூட்டுகிறார்.

Advertisment
Advertisements

தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு தனது பதிவில் அந்த அதிகாரியின் சமயோசித புத்தியை பாராட்டினார்.

“நீலகிரி மாவட்டம் நடுவட்டம் காவல் நிலையத்தை ஒரு சிறுத்தை ஆய்வு செய்ய முடிவு செய்தது. பணியில் இருந்த போலீஸ்காரர் அமைதியாக கதவை மூடி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததற்கு பாராட்டுக்கள். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சிறுத்தை பாதுகாப்பாக வனத்திற்குத் திரும்பியது,” என்று அவர் எழுதினார்.

வீடியோவைப் பாருங்கள்:

இந்த வீடியோ ஒரு லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது, பல்வேறு எதிர்வினைகளைத் தூண்டியது. “இப்போதெல்லாம் சிறுத்தைகள் காவல் நிலையங்களையும், வனவிலங்கு வன அலுவலகங்களையும் ஆய்வு செய்கின்றன” என்று ஒரு பயனர் எழுதினார். “அந்த போலீஸ்காரர் மிகவும் அமைதியாகவும் நிதானமாகவும் இருந்தார். அதனால்தான் நல்லபடியாக முடிந்தது. சிறுத்தையும் மிகவும் அமைதியாக இருந்தது,” என்று மற்றொரு பயனர் கருத்து தெரிவித்தார்.

“ஆனால் இது போன்ற மனித - விலங்கு மோதல்களுக்கு நிரந்தர தீர்வு காணவும், இது மேலும் நடக்காமல் தடுக்கவும் நாம் ஏதாவது செய்ய வேண்டும்” என்று மூன்றாவது பயனர் கூறினார். “வாவ்! பார்ப்பதற்கு மிகவும் பரபரப்பாக இருந்தது. அவ்வளவு அமைதியாகவும் நிதானமாகவும் இருந்த அந்த மனிதருக்கு வாழ்த்துக்கள்!” என்று நான்காவது பயனர் எழுதினார்.

ஐந்தாவது நபர், “சார் ஒரு கம்ப்ளைண்ட் கொடுக்கணும் சார்” என்று சிறுத்தை காவல் நிலையத்துக்கு வந்த வீடியோவுக்கு நகைச்சுவையாக கமெண்ட் செய்துள்ளார்.

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: