குஜராத் காட்டில் சிங்கம் ஒன்று தனியாக காடே அதிரும்படி கர்ஜனை செய்யும் வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.
மனிதர்களுக்கு வன விலங்குகளைக் காண்பதில் எப்போது ஒரு ஆர்வம் இருந்துகொண்டே இருக்கிறது. காடுகளில் இருந்து, வன உயிரினங்களிடம் இருந்து அந்நியப்பட்டுப் போன மனிதர்கள், வனவிலங்குகளை டிஸ்கவரி டிவியில் பார்த்து வியந்துகொண்டிருக்கிறார்கள். அதனால், நாள்தோறும் ஒரு வனவிலங்கின் வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.
காட்டுக்கு ராஜாவான சிங்கம் வன விலங்குகளிலேயே அதிக வலிமையுடையது என்பது என பலருக்கும் தெரியும். காட்டுக்கு ராஜாவாக இருக்கும் சிங்கம் காட்டில் அதனது அதிகார எல்லையை, காட்டையே அதிரச் செய்யும் தனது கர்ஜனை ஒலியால் நிர்ணயிக்கிறது.
Gir Series #2
A lion's roar is not heard but experienced....A lion can roar upto 45 times in a row in a process to mark his territory. pic.twitter.com/Inm3pJXb2O— Ankit Kumar, IFS (@AnkitKumar_IFS) February 10, 2020
அப்படி, குஜராத் காட்டில் சிங்கம் ஒன்று தனியாக கர்ஜிக்கும் வீடியோவை வனத்துறை ஐஎஃப்எஸ் அதிகாரி அங்கித் குமார் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், சிங்கம் கர்ஜித்து கேட்டதில்லை. ஆனால், இப்போது அனுபவமாகியிருக்கிறது. ஒரு சிங்கம் தொடர்ந்து 45 முறை வரை கர்ஜிக்கும். அதனுடைய கர்ஜனை மூலம் காட்டில் அதன் அதிகார எல்லையை நிர்ணயிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது.
வீரத்திற்கு உவமையாகவும் உருவகமாகவும் சிங்கங்கள்தான் சொல்லப்படுகின்றன. அதனால்தான், சிங்கத்தின் கம்பீரமாக கர்ஜனை பார்த்தவர்கள், சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ... என்று சொல்வார்கள். இந்த சிங்கமும் என்னா கர்ஜனை செய்கிறது பாருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.