New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/10/boy-singing.jpg)
இதழில் கதை எழுதும் நேரமிது பாடலை அச்சுப் பிசகாமல் அப்படியே அருமையாகப் பாடும் சிறுவனின் வீடியோ வைரலாகி வருகிறது. சிறுவனின் பாடலைக் கேட்ட நெட்டிசன்கள் சிறுவன் இதழில் இசை எழுதுகிறான் என்று கூறி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதழில் கதை எழுதும் நேரமிது பாடலை அச்சுப் பிசகாமல் அப்படியே அருமையாகப் பாடும் சிறுவனின் வீடியோ வைரலாகி வருகிறது. சிறுவனின் பாடலைக் கேட்ட நெட்டிசன்கள் சிறுவன் இதழில் இசை எழுதுகிறான் என்று கூறி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனும் காதல் ஜெமினி கணேசனும் இணைந்து நடித்த உன்னால் முடியும் தம்பி திரைப்படம் 1988ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா அமைத்த எல்லா பாடல்களுமே ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த உன்னால் முடியும் தம்பி என்ற பாடலும் இதழில் கதை எழுதும் பாடலும் புஞ்சை உண்டு நஞ்சை உண்டு என்ற பாடலும், இதழில் கதை எழுதும் நேரமிது என்ற பாடலும் சூப்பர் ஹிட் ஆனது. அதிலும் இதழில் கதை எழுதும் நேரம் என்பதுகள் மற்றும் 90கள் தொடக்கத்தில் இளைஞர்களாக இருந்தவர்களின் காதல் கீதமாக இருந்தது.
கவிஞர் முத்துலிங்கம் எழுதிய இதழில் கதை எழுதும் நேரமிது பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் கே.சித்ரா பாடியிருந்தனர். இசை நுட்பங்கள் நிறைந்த இந்த பாடல் அன்றைக்கும் மட்டுமல்ல இன்றைக்கும் இசை ரசிகர்கள் விரும்பும் பாடலாக உள்ளது.
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்குப் பிறகு, அவருடைய புகழ்பெற்ற பாடல்கள் பல ரசிகர்களை ஈர்த்து மீண்டும் இணையத்தில் பரவிவருகிறது.
அந்த வகையில் சிறுவன் ஒருவன் இதழில் கதை எழுதும் நேரமிது பாடலை அச்சுப் பிசகாமல் அப்படியே பாடியுள்ளான். சிறுவன் பாடிய வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், நெட்டிசன்கள் பலரும் சிறுவனின் இசை திறமையை பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இதழில் கதை எழுதும் நேரமிது பாடலைப் பாடும் சிறுவன் உண்மையில் இதழில் இசை எழுதுகிறான் என்ன ஒரு இனிமையான குரல் என்று வாழ்த்துகளைப் பெற்று வருகிறான்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.