டி.ஆர்.பி ராஜாவுக்கு 'ஆடு' பரிசு வழங்கிய நிர்வாகி: கோவை தேர்தல் ருசிகரம்

கோவை மருதமலையில் தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்ற போது அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவிற்கு தி.மு.க ஐ.டி விங் நிர்வாகி ஆட்டுக்குட்டியை பரிசாக வழங்கினார்.

கோவை மருதமலையில் தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்ற போது அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவிற்கு தி.மு.க ஐ.டி விங் நிர்வாகி ஆட்டுக்குட்டியை பரிசாக வழங்கினார்.

author-image
WebDesk
New Update
TRB Raja goa.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்தியா கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மருதமலையில் இன்று (மார்ச் 27)  பிரச்சாரத்தை துவக்கினார். இவருக்கு ஆதரவாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். 

Advertisment

அப்போது, தி.மு.க ஐ.டி விங் மருதமலை பகுதி ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ், டி.ஆர்.பி ராஜாவுக்கு ஆட்டுக் குட்டியை பரிசாக வழங்கினார். 

இந்த புகைப்படம் தற்போது, பார்த்திபன்- வடிவேல் காமெடி மாதிரி, பார்த்திபன் அருவாளுடன் இருப்பது போன்றும், வடிவேல் கழுத்தில் கயிறு கட்டி இழுப்பது போன்றும், படத்துடன், "கோவை மக்கள் - ஆடு"  என சித்தரிக்கப்பட்டு வைரலாகி வருகின்றது.  

Advertisment
Advertisements

முன்னதாக, கோவை மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட அதன் மாநிலத் தலைவர்  
அண்ணாமலை அறிவிக்கப்பட்டவுடன், அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, "கோவை மக்களுக்கு பிரியாணி ரெடி" எனக் கூறியது டிரெண்டிங் ஆனது. தற்போது இந்த ஆட்டுக்குட்டி டிரண்டிங் ஆகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: