New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Magna-elephant.jpg)
பொள்ளாச்சி அருகே வனப்பகுதி ஒட்டி நடமாடும் மக்னா யானை
பொள்ளாச்சி அருகே வனப்பகுதி ஒட்டி நடமாடும் மக்னா யானையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
பொள்ளாச்சி அருகே வனப்பகுதி ஒட்டி நடமாடும் மக்னா யானை
பொள்ளாச்சி அருகே வனப்பகுதி ஒட்டி நடமாடும் மக்னா யானையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
தருமபுரி அருகே விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த மக்னா காட்டு யானையை வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் மயக்க ஊசி செலுத்தி ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்ஸ்லிப் யானை குந்தி அடர் வனப்பகுதியில் மக்னா விடப்பட்டது.
பொள்ளாச்சி அருகே வனப்பகுதி ஒட்டி நடமாடும் மக்னா யானை - வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு pic.twitter.com/WbRj1243Ud
— Balaji (@vananeeli) June 19, 2023
கடந்த சில தினங்களில் வனத்தை விட்டு வெளியேறிய தனியார் தோட்டங்கள் வழியாக மக்னா கோவை மதுக்கரை வரை சென்றது. வனத்துறையினர் மீண்டும் இரண்டாவது முறையாக மக்னாவிக்கு மயக்க ஊசி செலுத்தி மானாம்பள்ளி வனச்சரகம் மந்திரி மட்டம் வனப்பகுதியில் விடப்பட்டது,ரேடியோ காலர் பொருத்தப்பட்ட நிலையில் மக்னா வானத்தை விட்டு வெளியேறி கடந்த மூன்று மாதங்களாக பொள்ளாச்சி வனச்சரகம் தம்பம்பதி மலை அடிவார பகுதிகளில் நடமாடி வருகிறது.
மக்னாவை விரட்ட கும்கிகள் சின்னதம்பி, சுயம்பு தயார் நிலையில் உள்ளது. இதையடுத்து வேட்டை தடுப்பு காவலர்கள் முகாம் அருகே மக்னா தற்போது நடமாடி வருகிறது.
யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி. ரஹ்மான்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.