டெல்லியில் இளைஞர் ஒருவர் டூத் பிரஷை விழுங்கி விட்டு அதை மருத்துவர்களிடம் மறைத்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
டூத் பிரஷை விழுங்கிய இளைஞர்:
டெல்லியை அடுத்த சீமாபுரியை சேர்ந்தவர் அவிட். 36 வயதாகும் இவர் சில தினங்களுக்கு முன்பு வயிற்று வலி காரணமாக மருத்துவமனை சென்றார். அவிட்டை பரிசோதித்த மருத்துவர்கள் சாதரணமான வலி என நினைத்து வலி நிவாரண மாத்திரைகளை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனாலும், அவிட்டின் வலி குறைந்த பாடில்லை. இதனால் மீண்டும் மருத்துவமனைக்கு சென்ற அவரின் வயிற்றுப் பகுதியினை ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது அதில் ஏதோ மர்ம பொருள் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
பின்பு அவிட்டை அழைத்து விசாரித்ததில், அவர் தனது தொண்டையின் உள்புறத்தை டூத் பிரஷ் கொண்டு சுத்தம்செய்து கொண்டிருந்தபோது தெரியாமல் அதனை விழுங்கி விட்டதாக மருத்துவர்களிடம் கூறினார். இதை அவிட் யாரிடமும் கூறவில்லையாம்.அதுவாகவே வெளிவந்துவிடும் என எண்ணி மருத்துவர்களிடமும் இதனை மறைத்துள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், அவிட்டை உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்லுமாறு பரிந்துரைத்தனர். எய்ம்ஸ் மருத்துவர்கள் என்டோஸ்கோப்பி மூலம் அவரின் வயிற்றில் இருந்த டூத் பிரஷை வெளியில் எடுத்துள்ளனர்.
பின்பு அவிட்டுக்கு கவனமாக இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். கவனக் குறையால் அவிட் டூத் பிரஷை விழுங்கிய சம்பவம் வேகமாக சமூகவலைத்தளங்களில் பரவியது.