New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/09/g3HZt71czOlIpGraUR6Q.jpg)
ஓடும் ரயிலில் தொங்கியபடி செல்ஃபி.. அடுத்த நடந்த அதிர்ச்சி! வைரலாகும் வீடியோ!
இளைஞர் ஒருவர் ரயிலில் தொங்கியபடி செல்ஃபி வீடியோ எடுத்தபடி வருகிறார். இதனை அவரது நண்பர் மற்றொரு புறம் இருந்து வீடியோ எடுப்பதுபோல தெரிகிறது. இந்நிலையில், எதிர்பாராத சம்வபம் நடக்கிறது. இதனால் அவர் அதிர்ச்சியடைகிறார்.
ஓடும் ரயிலில் தொங்கியபடி செல்ஃபி.. அடுத்த நடந்த அதிர்ச்சி! வைரலாகும் வீடியோ!
ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருகிறது. வைரலாக வேண்டும் என்பதற்காக மக்கள் வி்த்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு சிலர் உயருக்கு ஆபத்தான முறையில் ஸ்டண்ட்களிலும் ஈடுபடுகிறார்கள். அந்த வகையில் ஓடும் ரயிலில் ரீல்ஸ் எடுக்கும் இளைஞர்கள் குறித்த செய்திகளை அடிக்கடி செய்திகளில் பார்த்திருப்போம்.
சமூக ஊடகங்களில் தங்களை ஹீரோவாக காட்டிக்கொள்ள மக்கள் பெரும்பாலும் வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒருபுறம் மக்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினாலும், சிலர் ஆபத்தான ஸ்டண்ட்களை மேற்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இளைஞர் ஒருவர் ரயிலில் தொங்கியபடி செல்ஃபி வீடியோ எடுத்தபடி வருகிறார். இதனை அவரது நண்பர் மற்றொரு புறம் இருந்து வீடியோ எடுப்பதுபோல தெரிகிறது. இந்நிலையில், எதிர்பாராத சம்வபம் நடக்கிறது. இதனால் அவர் பெரும் அதிர்ச்சியடைகிறார். அப்போது, அவர் கொடுக்கும் ரியாக்ஷன்தான் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
क्या जरूरत ही चलती ट्रेन में सेल्फी लेने की? pic.twitter.com/4tKK8AWNoM
— Bhanu Nand (@BhanuNand) June 7, 2025
அந்த வீடியோவில், ரயிலின் வாசலில் நின்றுகொண்டு இளைஞர் ஒருவர் தன்னைத்தானே செல்ஃபி எடுத்துக்கொள்வதைக் காணலாம். அவர் ரயில் வேகமாக பயணிக்கும்போது செல்ஃபி எடுக்க முயல்கிறார். ஸ்டைலாக தலை முடியைக் கோதியபடி அவர் வீடியோ எடுக்கிறார். ஆனால் சிறிது நேரத்தில் அவர் கையில் இருக்கும் ஃபோன் அவர் கைகளில் இருந்து நழுவி கீழே விழுகிறது. இதனையடுத்து அவர் அதிர்ச்சியில் அவர் கொடுக்கும் ரியாக்சன்தான் ஹைலைட்டாக அமைந்துள்ளது. அவர் பதறியபடி தனது நண்பரிடம் தனது போன் கீழே விழந்ததை சொல்கிறார். இதனை மற்றொரு கதவின் வழியாக நின்று வீடியோ எடுக்கிறார். ஒருவேளை அவர் போனை தவறவிடுவது அவருக்கு முன்கூட்டியே தெரிந்திருக்குமோ எப்படி சரியாக இந்த நிகழ்வை அவர் தனது போனில் பதிவி செய்திருக்கிறார் என்ற கேள்வியும் எழுகிறது.
இந்த வீடியோ @BhanuNand என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இது ஆயிரக்கணக்கான மக்களால் விரும்பி பார்க்கப்பட்டுள்ளது. ரயில் சாகசம் செய்து ரீல்ஸாக அப்லோடு செய்து வரைலாக வேண்டும் என்று நினைத்திருப்பார், ஆனால் இப்படி வைரலாவோம் என கனவிலும் நினைத்திருக்க மாட்டார் என்று ஒருவர் கமெண்டில் குறிப்பிட்டிருக்கிறார். மற்றொருவர், இனி அவர் தன் வாழ்நாளில் செல்ஃபி எடுக்க வேண்டும் என்றால் நிச்சயம் யோசிப்பார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.