Advertisment

மேட்டுப்பாளையம்: பிரதான சாலையில் சாவகாசமாக நடந்து சென்ற பாகுபலி யானை - வைரல் வீடியோ

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் பிரதான சாலையில் சாவகாசமாக நடந்து சென்ற பாகுபலி யானை வீடியோ காட்சி சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Mettupalayam Baahubali elephant walking casually on the main road  viral video Tamil News

மேட்டுப்பாளையம்: கடந்த சில தினங்களாக பாகுபலி என்ற ஒற்றைக்காட்டு யானையின் நடமாட்டம் அதிகமாகவே இருந்து வருகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Advertisment

Elephant: மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான ஓடந்துறை, பாலப்பட்டி,வச்சினம்பாளையம், தேக்கம்பட்டி, நெல்லித்துறை, சமயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பாகுபலி என்ற ஒற்றைக்காட்டு யானையின் நடமாட்டம் அதிகமாகவே இருந்து வருகிறது.

இந்த யானை பகல் நேரங்களில் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி வனபத்ரகாளியம்மன் கோவில் சாலையில் உள்ள சமயபுரம் வழியாக நெல்லி மலை வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களுக்குள் செல்கிறது. பகல் முழுவதும் விளைநிலங்களில் சுற்றித்திரிந்து உணவு தேடிய பின்னர் மீண்டும் இரவு நேரங்களில் வனப்பகுதிக்கு திரும்புகிறது.

இந்த நிலையில், இன்று காலை மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை சமயபுரம் வழியாக மேட்டுப்பாளையம் -  வனபத்ரகாளியம்மன் கோவில் பிரதான சாலையில் சாவகாசமாக நடந்து சென்றது. இதனை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி யானை செல்ல வழி ஏற்படுத்திக்கொடுத்தனர். 

தொடர்ந்து யானை நெல்லி மலை வனப்பகுதிக்குள் சென்றது.அதன் பின்னரே வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை அங்கிருந்து எடுத்துச்சென்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் ஆண்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Elephant
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment