அமெரிக்காவில் மாடல் ஒருவர் தனது 5 குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தப்படியே ராம்ப்வாக் செய்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் பிரபல மாடலான மாரா மார்ட்டின் ஒரே நாளில் இண்டர்நெட் சென்ஷேனாக மாறியுள்ளார். மயாமி நகரில் நடைப்பெற்ற நீச்ச உடை ஃபேஷன் ஷோவில் மாடல் மாரா செய்த துணிச்சலுக்கான செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு மயாமி நகரில் நடந்த நீச்சல் உடைக்கான ஃபேஷன் ஷோவில் மாரா கலந்துக் கொண்டார். அப்போது அவர் பசியால் அழுதுக் கொண்டிருந்த தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தப்படியே பிகினி உடையில் ராம்ப்வாக் செய்தார். இதை பார்த்த விருந்தினர்கள் மற்றும் அங்கிருந்த பார்வையாளர்கல் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்பு, அவரின் செயலை கண்டு நெகிழ்ந்து அந்த விழாவில் அவரை பாராட்டியும் பேசினார்.
ஃபேஷன் ஷோவில் தனது 5 மாத குழந்தையுடன் மாரா ராம்ப்வாக் செய்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனை பார்த்த பலரும் மாரா மார்ட்டின் செயலை வெகவாக பாராட்டியுள்ளனர்.
இதுக் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மாடல் மாரா கூறிப்பிருப்பது, “ நான் என் மகளுக்கு தாய்ப்பால் கொடுத்தது தலைப்புச் செய்தியாகியுள்ளதை என்னால் நம்ப முடியவில்லை. நான் தினமும் செய்யும் வேலைக்காக என்னை பாராட்டியதை வரவேற்கிறேன்” என்று கூறியுள்ளார்.