Advertisment

வால்பாறை அடுத்த சிறு குன்றா பகுதியில் யானை குட்டியை தூங்க வைத்த தாய் யானை: வீடியோ

வால்பாறை அடுத்த சிறுகுன்றா பகுதியில் தேயிலை தோட்டத்தின் அருகாமையில் தன்னுடைய குட்டி யானையை சுகமாக தூங்க வைத்து பாதுகாப்பாக பார்த்த தாய் யானை வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
elephant calf

யானை குட்டியை தூங்க வைத்த தாய் யானை

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த சிறுகுன்றா பகுதியில் தேயிலை தோட்டத்தின் அருகாமையில் தன்னுடைய குட்டி யானையை சுகமாக தூங்க வைத்து பாதுகாப்பாக பார்த்துக்கொண்ட தாய் யானையைக் கண்டு வியந்த சுற்றுலாப் பயணிகள் செல்பி போட்டோ எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisment

தற்போது ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளின் யானைகளின் புகலிடமாக வால்பாறை காணப்படுகிறது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனி குழுவாக பிரிந்து இன்று சிறுகுன்றா பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அங்குள்ள ஓடையில் சேற்றுடன் தண்ணீரை எடுத்து மேலே ஊற்றிக் கொண்டு இருந்த பொழுது அதன் தாயின் உடைய நிழலில் படுத்து உறங்கிய குட்டியை தாய் யானை மிகவும் பாதுகாப்பாக பார்த்துக் கொண்டிருந்த காட்சி மிகவும் பிரமிக்க வைத்தது.

வால்பாறை பகுதியில் அதிக அளவில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் யானையின் வழித்தடத்தில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் நிறுத்தி அதன் பாதையை மறிப்பதால் கோபம் கொண்டு அப்பகுதியில் உள்ள சுற்றுலா பகுதிகளை விரட்டக்கூடிய ஒரு நிலையும் ஏற்படுகிறது. இதனை வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அடர்ந்த காட்டுப் பகுதிக்கு விரட்டப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment