Advertisment

சென்னையில் மழைக்கு இடையே நடுரோட்டில் நடமாடிய முதலை: சுப்ரியா சாகு ஐ.ஏ.எஸ் விளக்கம்

பெருங்களத்தூர்- நெடுங்குன்றம் சாலையில் வேலம்மாள் பள்ளி அருகே முதலை ஒன்று சாலையை கடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் சுப்ரியா சாகு ஐ.ஏ.எஸ் விளக்கம்

author-image
WebDesk
New Update
Croco.jpg

மிக்ஜாம் புயல் காரணமாக  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏரி, குளம், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி  வருகிறது. சாலையில் வெள்ள நீர் தேங்கி வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.  

Advertisment

இந்நிலையில், கனமழைக்கு நடுவே சென்னை புறநகர் பெருங்களத்தூர்- நெடுங்குன்றம் சாலையில் வேலம்மாள் பள்ளி அருகே முதலை ஒன்று சாலையை  கடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

இந்நிலையில் இதுகுறித்து வனத் துறை கூடுதல் செயலாளர் சுப்ரியா சாகு ஐ.ஏ.எஸ் விளக்கமளித்துள்ளார். அதில், "சென்னையில் உள்ள பல நீர்நிலைகளில்  மக்கர் வகை முதலைகள் உள்ளன. இவை கூச்ச சுபாவமுள்ள மற்றும் மனிதர்களை விட்டு தள்ளியிருக்க விரும்பும் உயிரினமாகும். வீடியோவில் காணப்படும் இந்த முதலை மிக்ஜாம் புயல் காரணமாக ஏதேனும் ஒரு நீர்நிலையிலிருந்து வெள்ளம் காரணமாக வெளியேறி இருக்கக்கூடும். 

மக்கள் யாரும் பயன்பட வேண்டாம். இந்த விலங்குகளை தனியாக விட்டுவிட்டு, துன்புறுத்தாமல் இருந்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. வனவிலங்கு அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil 

 

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment