ஒரே ஓடுபாதையில்... ஏர் இந்தியா ஜெட் புறப்படும்போது தரையிறங்கிய இண்டிகோ விமானம்: பரபரப்பு வீடியோ!

அந்த நேரத்தில் பணியில் இருந்த ஏ.டி.சி அதிகாரி விசாரணைக்கு இடையே பணிநீக்கம் செய்யப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்த நேரத்தில் பணியில் இருந்த ஏ.டி.சி அதிகாரி விசாரணைக்கு இடையே பணிநீக்கம் செய்யப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் வட்டாரங்கள் தெரிவித்தன.

author-image
WebDesk
New Update
clash avoid

ஒரே ஓடுபாதையில் இண்டிகோ விமானம் கீழே இறங்கியபோது ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது - இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்க டி.ஜி.சி.ஏ உத்தரவிட்டது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மும்பை விமான நிலையத்தில் சனிக்கிழமையன்று இரண்டு விமானங்கள் ஓடுபாதையில் மோதுவதைத் தவிர்த்தன - ஒரே ஓடுபாதையில் இண்டிகோ விமானம் கீழே இறங்கியபோது ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது - இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ) உத்தரவிட்டது.

Advertisment

அந்த நேரத்தில் பணியில் இருந்த ஏடிசி அதிகாரி விசாரணைக்கு இடையே பணிநீக்கம் செய்யப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisment
Advertisements

இந்தூரில் இருந்து வந்த இண்டிகோ விமானம் மற்றும் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஆகிய இரு விமானங்கள் ஒரே நேரத்தில் சனிக்கிழமை காலை நிகழ்ந்ததை பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து இரு விமான நிறுவனங்களும் ஊடக அறிக்கையை வெளியிட்டு, இந்த விமானங்களின் விமானிகளுக்கு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டகத்தால் (ஏ.டி.சி) அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறியது.

“ஜூன் 8, 2024 அன்று, இந்தூரில் இருந்து இண்டிகோ விமானம் 6E 6053 மும்பை விமான நிலையத்தில் ஏ.டி.சி மூலம் தரையிறங்க அனுமதி வழங்கியது. பைலட் இன் கமாண்ட் அணுகுமுறை மற்றும் தரையிறக்கத்தைத் தொடர்ந்தார் மற்றும் ஏ.டி.சி வழிமுறைகளைப் பின்பற்றினார். இண்டிகோவில், பயணிகளின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது. மேலும், இந்த சம்பவத்தை நடைமுறையின்படி நாங்கள் புகாரளித்துள்ளோம்” என்று இண்டிகோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியாவும், ஏ.டி.சி தனது விமானத்தை புறப்பட அனுமதித்ததாகக் கூறியது. மும்பையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு AI657 ஜூன் 8-ம் தேதி புறப்பட்டது. ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையில் நுழைவதற்கு ஏர் டிராஃபிக் கன்ட்ரோலால் அனுமதிக்கப்பட்டது. பின்னர், புறப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டது. ஏர் இந்தியா விமானம் வகுக்கப்பட்ட நடைமுறைகளின்படி புறப்படும் இயக்கத்தைத் தொடர்ந்தது. விமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி குறித்து மேலும் அறிய அதிகாரிகளால் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது” என்று அது கூறியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: