Advertisment

மும்பையில் வெள்ளத்தில் மூழ்கிய தண்டவாளத்தில் ஓடும் ரயில்; ‘வந்தே வாட்டர்ஸ்’ நெட்டிசன்கள் கிண்டல்: வைரல் வீடியோ

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் நகைச்சுவை உணர்வுடன் ‘வாட்டர் மெட்ரோ திறப்பு விழா’ அல்லது ‘வந்தே வாட்டர்ஸ்... உலகின் முதல் ஆம்பிபியஸ் ரயில் தொழில்நுட்பம்’ என்று கிண்டல் செய்து விமர்சித்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
water logged train

அதிக மழை வெள்ளம் தேங்கியுள்ள ரயில் தடங்கள் வழியாக உள்ளூர் ரயில் கடந்து செல்லும் வீடியோ (Picture Source: @Madan_Chikna/X)

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் நகைச்சுவை உணர்வுடன் ‘வாட்டர் மெட்ரோ திறப்பு விழா’ அல்லது ‘வந்தே வாட்டர்ஸ்... உலகின் முதல் ஆம்பிபியஸ் ரயில் தொழில்நுட்பம்’ என்று கிண்டல் செய்து விமர்சித்து வருகின்றனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: ‘Amphibious train technology’: Video of train running through waterlogged rail tracks in Mumbai goes viral

மும்பையில் செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மும்பையில் தொடர்ந்து 300 மி.மீ.க்கு மேல் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால், மும்பை கனமழையால் பாதிக்கப்பட்டிருப்பதைக் காட்டும் பல வீடியோக்களில், மழைநீரில் மூழ்கிய வாகனங்கள் முதல் மழை வெள்ளம் தேங்கிய சாலைகளில் பயணிக்கும் பயணிகள் வரை சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன.

அந்த வகையில், ஜூலை 8-ம் தேதி வெளியான ஒரு வீடியோ, லோக்கல் ரயில், மழைநீர் தேங்கிய ரயில் பாதைகள் வழியாகச் செல்வதைக் காட்டுகிறது.

இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள   காட்மேன் சிக்னா (@GodmanChikna) குறிப்பிடுகையில், “அவர்கள் ரயில்வே மற்றும் நீர்வழிகளுக்கு இடையே ஒரு கூட்டுப்பணி செய்துள்ளார்கள்” என்று நகைச்சுவையுடன் விமர்சித்துள்ளார்.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் நகைச்சுவை உணர்வுடன் ‘வாட்டர் மெட்ரோ திறப்பு விழா’ அல்லது ‘வந்தே வாட்டர்ஸ்... உலகின் முதல் ஆம்பிபியஸ் ரயில் தொழில்நுட்பம்’ என்று தலைப்பிட்டு விமர்சித்துள்ளனர். ஒரு நபர் இதை  “ஒரு அரிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பு” என்று கிண்டல் செய்து விமர்சித்துள்ளார்.  “நாங்கள் சீனா மற்றும் ஜப்பானை விட்டு வெளியேறி, தண்ணீருக்கு மேல் ரயிலை ஓட்டினோம். ஒவ்வொரு ஆண்டும் எங்கள் ரயில் மழையில் ஆம்பிபியஸ் பயன்முறைக்கு மாறுகிறது.” கிண்டல் செய்து விமர்சித்துள்ளார்.

மற்றொரு பயனர், “நீங்கள் ஒரு ரயில் டிக்கெட்டுக்கு பணம் செலுத்தும்போது (ஒருவேளை இல்லை), நீங்கள் இலவசமாக நீரில் சவாரி செய்யலாம்.” என்று கம்மெண்ட் செய்துள்ளார்.

மும்பையில் செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு ரயில்வே சிறிய தாமதங்கள் குறித்து பயணிகளை புதுப்பித்துள்ளது. அறிக்கைகளின்படி, சி.ஆர், தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஸ்வப்னில் நிலா, மெயின் லைனில் உள்ள ரயில்கள் கட்டுப்படுத்தப்பட்ட வேக வரம்பில் இரு திசைகளிலும் மெதுவான பாதையில் இயக்கப்படுகின்றன. பாண்டுப்பில் உள்ள தண்டவாளத்தில் தற்போது நீர்மட்டம் 4 அங்குலமாக உள்ளதால் ரயில்களின் வேகம் குறைவாக உள்ளது என்று நிலா கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment