மாநில வனவிலங்கு வரையாடு மந்தை; வனத்துறை செயலர் வெளியிட்ட வீடியொ வைரல்

நீலகிரியில் முக்கூர்த்தி தேசிய பூங்காவில், மேய்ந்து கொண்டிருக்கும் வரையாடுகள் மந்தை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நீலகிரியில் முக்கூர்த்தி தேசிய பூங்காவில், மேய்ந்து கொண்டிருக்கும் வரையாடுகள் மந்தை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
A Nilgiri goats

நீலகிரி முக்கூர்த்தி பகுதியில் வரையாடுகளை தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு ஆய்வு செய்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாட்டின் மாநில வனவிலங்கான வரையாடுகள் வாழக்கூடிய நீலகிரி முக்கூர்த்தி பகுதியில் தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு ஆய்வு செய்தார். அப்போது, மலையில் மேய்ந்துகொண்டிருந்த வரையாடுகள் மந்தையை வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார். நீலகிரியில் முக்கூர்த்தி தேசிய பூங்காவில், வரையாடுகள் மந்தையாக காணப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisment

நீலகிரி வரையாடுகள் அழிந்துவரும் இனமாக மாறியுள்ளது. அதனால், நீலகிரி வரையாடுகள் திட்டம் மூலம் தமிழக அரசு வரையாடுகளை அழிவில் இருந்து மீட்பதற்காக கணக்கெடுத்து வருகிறது. 

இந்நிலையில், நீலகிரி முக்கூர்த்தி பகுதியில் மேய்ந்துகொண்டிருந்த வரையாடுகள் மந்தையை தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், நீலகிரி வரையாடுகளைப் பார்வையிட்ட சுப்ரியா சாகு, வரையாடுகளைப் பார்வையிட்டபோது பதிவு செய்த வீடியோவை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

மூக்கூர்த்தி தேசிய பூங்காவில் உள்ள 31 வரையாடுகளைப் பார்வையிட்ட சுப்ரியா சாகு, வரையாடுகளின் முக்கியத்துவம் குறித்தும், தமிழக அரசு வரையாடுகளை அழிவில் இருந்து மீட்பதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பதிவிட்டுள்ளார். 

Advertisment
Advertisements

அந்த பதிவில் சுப்ரியா சாகு பதிவிட்டிருப்பதாவது: “உங்கள் களப்பயணத்தில் குறைந்தது ஒரு நீலகிரி வரையாட்டையாவது பார்க்க வேண்டும் என்று நீங்கள் பிரார்த்தனை செய்கிறீர்கள், ஆனால் ஒன்றிரண்டு அல்ல, 31 நீலகிரி வரையாடுகளைக் கொண்ட ஒரு பெரிய அழகான மந்தையைப் பார்க்கலாம். அண்டை நாடான கேரளாவுடன் ஏப்ரல் 29 முதல் அழிந்து வரும் நீலகிரி வரையாடுகளின் கணக்கெடுப்பு நடக்க உள்ளது. இந்த கணக்கெடுப்பு பணி வரையாடுகளின் பாதையில் 700 க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் 3 நாட்களுக்குள் செய்யப்படும். வரையாடுகள் வாழ்விடத்திற்கு முக்கியமான புல் மற்றும் பிற தாவர இனங்களை குழு ஏற்கனவே ஆவணப்படுத்தியுள்ளது. இந்த நீலகிரி வரையாடு திட்டம் மற்றும் நீலகிரி வரையாடு குறித்து பகிர்ந்து கொள்ள பூமி தினத்தை விட சிறந்த நாள் எது?” என்று தெரிவித்துள்ளார்.

நீலகிரியில் முக்கூர்த்தி தேசிய பூங்காவில், மேய்ந்து கொண்டிருக்கும் வரையாடுகள் மந்தை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: