New Update
/indian-express-tamil/media/media_files/2024/10/24/Se3bX5vWzNRE9zw4uUyu.jpg)
நீலகிரியில் வனத்துறையினரை விரட்டி தாக்கி, வாகனத்தை சேதப்படுத்திய காட்டு யானை; மீண்டும் காட்டுக்குள் விரட்டிய வனப் பணியாளர்கள்
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பகுதியில் காட்டு யானையை விரட்ட சென்ற வனத்துறையினரை காட்டு யானை விரட்டி தாக்கிய சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக வனப்பணியாளர்கள் உயிர் தப்பித்தனர்.
கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் சுற்றித் திரிகின்றன. இதனால் வனத்துறையினர் காட்டு யானைகளை கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு ஓவேலி பார்வுட் அருகே உள்ள ஆரம்ப சுகாதார பகுதியில் வனத்துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சக்கரை தீனி என்ற பெண் காட்டு யானை சாலையில் நின்று இருந்தது.
இதனை கண்ட வனத்துறையினர் அதை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டபோது திடீரென காட்டு யானை வனத்துறையினரின் வாகனத்தை நோக்கி ஓடி வந்து துதிக்கையால் வாகனத்தை தாக்கியது. வனத்துறையினர் கூச்சலிட்டு வாகனத்தை பின்னோக்கி எடுத்து உயிர் தப்பினர். இதில் 5 வனப்பணியாளர்கள் காட்டு யானையிடமிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்தினர். காட்டு யானை தாக்கியதில் வனத்துறையினரின் வாகனம் சேதமடைந்தது. பின்பு மீண்டும் வனத்துறையினர் யானையின் பின் சென்று அடர்வனப் பகுதிக்குள் சென்று காட்டு யானையை விரட்டினர்.
நீலகிரியில் வனத்துறை வாகனத்தை தாக்கிய காட்டு யானை; அதிர்ஷ்டவசமாக தப்பிய வனப் பணியாளர்கள்#Nilgiris #Elephant pic.twitter.com/3T5mzAEIvJ
— Indian Express Tamil (@IeTamil) October 24, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.