இரண்டு ட்ரோன்களை கால்பந்து விளையாடும் காணொலி, சமூக வலைதளத்தில் வைரலானது. சுமார் 2லட்சம் பார்வையாளர்களை கொண்ட அந்த வீடியோ, முற்றிலுமான அனிமேஷனில் தயாரிக்கப்பட்டது என்ற உண்மை தெரியவந்துள்ளது.
இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் சரண், குழந்தைகள் வீட்டில் செல்போனில் மூழ்கியுள்ள நிலையில், மிஷின்கள் வெளியே வந்து விளையாடி கொண்டிருக்கிறது என ட்வீட் செய்திருந்தார்.
இந்த வீடியோ பகிரும் பலரும் கருத்து தெரிவிந்து வந்தனர். குழந்தைகள் வீட்டைவிட்டு வெளிய வரவே யோசிக்கும் இந்த காலத்தில், ட்ரோன்களுக்கு பயிற்சி கொடுத்து விளையாடு வைப்பது ஜோக் கிடையாது என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இது முற்றிலுமாக டிஜிட்டல் அனிமேஷனில் தயாரிக்கப்பட்டது என்று அதை தயாரித்த 3டி ஆர்டிஸ்ட் ஹமித் இப்ரஹிமனியா தெரிவித்துள்ளார். ட்ரோன் பைலட்கள் வீட்டில் குரான்டைனில் இருக்கிறார்கள் என்ற ஹேஷ்டேக்கில் வீடியோவின் ஒரிஜினல் பைலை அப்லோடு செய்திருக்கிறார்.இந்த அனிமேஷனை Cinema4d, Mocha சாப்டவேரில் Track செய்தும், After Effects இல் Composite செய்தும் தயாரித்தேன் என பதிவிட்டிருந்தார். உண்மையான வீடியோ ஹெச்டி தரத்தில் பார்க்கையில், அவை அனிமேஷன் செய்யப்பட்டவை என்பது தெளிவாக தெரிகிறது.
இந்த வீடியோ அனிமேட்டாக மாறியிருந்தாலும், மனிதர்கள் செய்யக்கூடிய விஷயங்களை ரோபோக்கள் செய்துக்காட்டிய நிகழ்வுகளும் உள்ளன. அதற்கு சிறந்த உதாரணம், சோபியா ரோபோட், தனக்கு பிடித்த நடிகர் ஷாருக்கான் என்று கூறியது.
2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பாஸ்டன் டைனமிக்ஸின் நான்கு ரோபோக்கள், முறையான மாஸ்டர் மூலம் சொல்லத்தரப்பட்ட ஸ்டேப்ஸ்களை கட்சிதமாக நடனமாடும் காணொலியை காண முடிந்தது.
கடந்த ஆண்டு, ஒரு படி முன்னேறி, MIT ஆல் உருவாக்கப்பட்ட மற்றும் ஹூண்டாய் வாங்கிய ரோபோக்களில் ஒன்று BTS இன் நடனத்தில் தேர்ச்சி பெற்றது. ஸ்பாட் என்று அழைக்கப்படும் ஒரு ரோபோ இசைக்குழுவின் இரண்டு முக்கிய நடனக் கலைஞர்களுடன் நடனமாடியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil