மூதாட்டி ஓசி டிக்கட் எனக்கு வேண்டாம் பணத்தை வாங்கிகொண்டு டிக்கட் கொடு என்று ஆவேசமாக நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கோவையில் இன்று காலை மதுக்கரையில் இருந்து பாலத்துறை செல்லும் அரசு பேருந்தில் ஏறிய வயதான மூதாட்டி ஒருவர் காசு கொடுத்து பயனச்சீட்டை கேட்டுள்ளார்.
அதற்கு நடத்துனர் காசு வேண்டாம் இலவசம் என்று கூறியதும், அந்த மூதாட்டி ஓசி டிக்கட் எனக்கு வேண்டாம் பணத்தை வாங்கிகொண்டு டிக்கட் கொடு என்று ஆவேசமாக நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், இலவசம்னு சொல்லிவிட்டு பொதுமக்களை ஓசி டிக்கட் என்று அவமான படுத்துவதா என்று கொந்தளித்தது பேருந்தில் பயனித்த மற்ற பயனிகளின் கவனத்தையும் திசை திருப்பியது.
நீண்ட நேரம் நடத்துனரிடம் விவாதத்தில் ஈடுபட்ட அந்த மூதாட்டி ஒருவழியாக சமாதானம் அடைந்தார்.
இந்த சம்பவத்தை அதே பேருந்தில் பயனம் செய்த யாரோ ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"