/indian-express-tamil/media/media_files/2025/10/26/wild-elephant-3-2025-10-26-13-01-15.jpg)
ஆலாந்துறை, இருட்டு பள்ளம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒற்றைக் கொம்பனும் மற்றும் தடாகம், வரப்பாளையம் சுற்று வட்டார பகுதியில் வேட்டையனும் ஊருக்குள் வரத் தொடங்கி உள்ளது.
கோவை, தொண்டாமுத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக உணவு தேடி உலா வரும் காட்டு யானைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் அங்கு உள்ள விவசாய விளை நிலங்கள் மற்றும் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி செல்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நரசிபுரம் பகுதியில் அதிகாலை நுழைந்த ஒற்றைக் கொம்பன் காட்டு அந்த ஊர் பொதுமக்களை அலறி அடித்து ஓடச் செய்தது.
இந்நிலையில், வனப் பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக் கொம்பன் காட்டு யானை, ஆலாந்துறை அடுத்த இருட்டு பள்ளம் கிராமத்திற்குள் நேற்று (25.10.2025) இரவு புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி விட்டு அதிகாலை நொய்யல் ஆற்றுக்குள் இறங்கி வனப் பகுதிக்குள் சென்றது. இதை அப்பகுதியில் இருந்த சிலர் செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளனர். அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை ஆலாந்துறை அருகே ஊருக்குள் புகுந்து மக்களை அலறவிட்ட ஒற்றைக் கொம்பன் காட்டு யானை, நொய்யல் ஆற்றை கடந்து செல்லும் வீடியோ#viralvideopic.twitter.com/fg9f79h1mL
— Indian Express Tamil (@IeTamil) October 26, 2025
கடந்த சில தினங்களுக்கு முன்பு மனிதர்களை அச்சுறுத்தி மூன்று பேரை கொன்ற ஒற்றைக் காட்டு யானை ரோலக்ஸை வனத் துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து பொள்ளாச்சி டாப்சிலிப்பில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர். அதில் இருந்து தப்பித்த விவசாயிகளும், பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், மீண்டும் ஆலாந்துறை, இருட்டு பள்ளம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒற்றைக் கொம்பனும் மற்றும் தடாகம், வரப்பாளையம் சுற்று வட்டார பகுதியில் வேட்டையனும் ஊருக்குள் வரத் தொடங்கி உள்ளது.
இதைத் தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us