சமீப காலமாக சமூகவலைத்தளங்களில் கண்களை குழப்பம் விதமான ஆப்டிக்கல் இல்யூஷன் இமேஜ்கள் வைரலாக பரவி வருகிறது. ஒரு புகைப்படத்தில் நம் கண்களுக்குத் தெரியும் காட்சி, சிலருக்கு வேறு மாதிரியாகவும், கூர்ந்து கவனித்தால் முற்றிலும் வேறாகவும் தோன்றும்.சில வகை ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியங்கள் அதனுள் மறைந்திருக்கும் ரகசியத்தை தேடி கண்டுபிடிக்க உங்களை தூண்டும் புதிர் விளையாட்டு போல் இருக்கும்.
அத்தகைய புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதிலிருக்கும் 5 விலங்குகளை கண்டுபிடியுங்கள் என்கிற சவாலை இணையவாசிகள் முன்வைக்கின்றனர்.

போட்டோவை சாதாரணமாக பார்த்தால் மரம் போல் தான் தெரியும். ஆனால், அதற்குள் விலங்குகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் கூர்மையாக புகைப்படத்தை ஊற்றுநோக்கினால், அதனை கண்டறிய முடியும்.
என்ன இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லையா… பதிலை கீழே காணலாம்.
அந்த போட்டோவில் 1 சேவல், 1 கோழி மற்றும் மூன்று கோழிக்குஞ்சுகள் இடம்பெற்றுள்ளன. நீங்கள் போட்டோவை துல்லியமாக கவனித்தால், இந்த விலங்குகள் வடிவங்கள் மரத்தின் கிளைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதை கண்டறிய முடியும், மேலும், பல இலைகள் விலங்குகளின் கண்கள் என்பது தெரியவரும்.

இந்த போட்டோவை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பு சேலஞ்ச் செய்யுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil