10ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவன்; கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்!

கர்நாடகாவில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மகன் அனைத்து பாடங்களிலும் தோல்வியடைந்ததை பெற்றோர் இனிப்பு பரிமாறி கொண்டாடிய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.

கர்நாடகாவில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மகன் அனைத்து பாடங்களிலும் தோல்வியடைந்ததை பெற்றோர் இனிப்பு பரிமாறி கொண்டாடிய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
karnataka parents

அனைத்து பாடத்திலும் ஃபெயில் ஆன மகன்; கேக் வெட்டிக் கொண்டாடிய பெற்றோர்!

கர்நாடகா மாநிலம், பாகல்கோட் பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் சோழச்சகுடா. இவர் பசவேஷ்வர் ஆங்கில வழிப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்தாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியிருந்தார். சமீபத்தில், அந்த தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில், அபிஷேக் 600-க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து அனைத்து பாடங்களிலும் தோல்வியடைந்தார். 

Advertisment

வழக்கமாக, மகன் தேர்வில் தோல்வியடைந்தால் பெற்றோர் திட்டியோ அல்லது அடித்தோ இருப்பார்கள். ஆனால், அபிஷேக் வீட்டில் அவரது பெற்றோர் அவருக்கு பக்கபலமாக இருந்து அவரை பாராட்டியுள்ளனர். மேலும், கேக் ஒன்றை ஆர்டர் செய்து அதை குடும்பமே சேர்ந்து வெட்டி இனிப்புகளை பரிமாறிக் கொண்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மாணவனின் பெற்றோர் சிந்தனையை நெட்டிசன்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

அபிஷேக்கின் தந்தை யல்லப்பா சோளச்சகுட்டா கூறுகையில், எனது மகன் தேர்வில் தோல்வியடைந்திருக்கலாம், ஆனால் வாழ்க்கையில் தோல்வியடையவில்லை. அவன் எப்போதும் மீண்டும் முயற்சி செய்து அடுத்த முறை வெற்றி பெறலாம்’ என மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர். தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் தங்கள் மகனுக்கு ஆறுதல் கூற கேக் வெட்டும் விழாவை ஏற்பாடு செய்தோம். அபிஷேக் 32% மதிப்பெண் பெற்றார், இந்த எண் கேக்கில் வடிவமைக்கப்பட்டது. அபிஷேக் கேக் வெட்டியபோது, நாங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவருக்கு உணவளித்து, அடுத்த முறை சிறப்பாக செயல்பட ஊக்குவித்தோம் என்று அவர் கூறினார். இந்த கொண்டாட்டத்தில் அபிஷேக்கின் பெற்றோர் தவிர, அவரது சகோதரி, பாட்டி மற்றும் பிற உறவினர்கள் பங்கேற்றனர்.

Advertisment
Advertisements

பெற்றோரின் ஆதரவால் மிகவும் நெகிழ்ச்சியடைந்த அபிஷேக் கூறியதாவது: ‘நான் தோல்வியடைந்தாலும், என் குடும்பத்தினர் என்னை ஊக்கப்படுத்தினர். நான் மீண்டும் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்று, வாழ்க்கையில் வெற்றி பெறுவேன் என்றார்.

Karnataka

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: