New Update
/indian-express-tamil/media/media_files/RDLcLWVq3esUVdIcqNVy.jpg)
மழை பொழிகின்ற நேரத்தில் தோகை விரித்து ஆடும் மயிலின் அழகை படம் பிடித்த சி.சி.டி.வி கேமரா
கோவையில் கடந்த ஒரு வார காலமாக மழை பொழிந்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவுகிறது. இது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையிலே, கோவை வேடப்பட்டி அருகே ஒரு வீட்டின் புல்வெளி பகுதியில் மயில் ஒன்று வந்தது. அந்த மயில் தோகை விரித்து ஆடியது. இது அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மழை வரும் அறிகுறியோ? தோகை விரித்து ஆடிய மயில்; அழகிய காட்சிகள் சி.சி.டி.வி-ல் பதிவு #Coimbatore pic.twitter.com/hxUC9QJx9Q
— Indian Express Tamil (@IeTamil) July 2, 2024
பொதுவாக மழை வரும் நேரத்தில் ஆண் மயில் தோகை விரித்து ஆடும் என்று சொல்வார்கள். அந்த வகையில், கோவையில் அவ்வப்போது மழை பொழியும் நிலையில், இந்த ஆண் மயில் தோகை விரித்து ஆடியது, "தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ? என்ற பாடலை நினைவு கூற செய்திருக்கின்றது.
சிசிடிவி கேமரா கண்களில் படம் பிடிக்கப்பட்ட இந்த தோகை விரித்தாடும் ஆண் மயில் அழகு, வாட்ஸ் அப்பில் வட்டமடித்து அதை பார்ப்போரின் கண்களையும் பரவசப்படுத்த ஆரம்பித்திருக்கின்றது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.