/indian-express-tamil/media/media_files/2024/11/23/Dy2ajsjiABdyH7OXz4Iv.jpg)
புதுச்சேரியின் மையப்பகுதியில் 2 சுற்றுலா பயணிகள் புகைப்பிடிக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு நாள்தோறும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இவ்வாறு புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் ஒரு சிலர் அளவுக்கு அதிகமான மது போதையில் பொது இடங்களில் அநாகரிகமான செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த இரண்டு பேர், அடிக்கடி பரபரப்பாக காணப்படும் நேரு வீதி - காமராஜர் சிலை சந்திப்பில் உள்ள சிக்னலில், சாலையின் நடுவே ஒய்யாரமாக அமர்ந்துகொண்டு புகைப்பிடித்துக் கொண்டிருந்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
பொதுமக்கள் அதிகளவில் கூடும் இது போன்ற இடங்களில் புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற செயல்களை தடுக்க வேண்டுமென சிலர் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் 2 சுற்றுலா பயணிகள் புகைப்பிடிக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது#pondicherry#touristspic.twitter.com/xEu8ghZjsV
— Indian Express Tamil (@IeTamil) November 23, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us