New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/13/ZlgER7zM4oWRBqY3eGw0.png)
தைப் பொங்கல் பண்டிகை நாளை (ஜன.14) தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையொட்டி பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
அதே போல் அரசியல் கட்சி சார்பிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், கோவை காளப்பட்டி பகுதியில் பாஜக விவசாய அணி சார்பில் பொங்கல் விழா நேற்று நடைபெற்றது.
இதில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். விழாவில் கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது. இதில் அண்ணாமலை உள்பட பா.ஜ.க நிர்வாகிகள் சேர்ந்து கயிறு இழுத்த பொழுது கயிறு திடீரென அறுந்ததில் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் கீழே விழச் சென்றனர். அண்ணாமலையை அவரது பாதுகாவலர்கள் தாங்கிப் பிடித்த நிலையில் மற்றவர்கள் தடுமாறி கீழே விழுந்தனர்.
திடீரென கயிறு அறுந்ததில் தடுமாறி விழப்போன அண்ணாமலை; தாங்கிப் பிடித்த காவலர்கள்#Annamalai pic.twitter.com/2FSjfPm7mD
— Indian Express Tamil (@IeTamil) January 13, 2025
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.