கோவை அரசு மருத்துவமனை ஸ்ட்ரெச்சர்கள்: கட்டிட வேலைக்கு பயன்படுத்தும் தனியார் நிறுவன ஊழியர்கள்: வைரல் வீடியோ

கோவை அரசு மருத்துவமனையில் அவசர காலத்தில் நோயாளிகளை அழைத்துச் செல்லும் ஸ்ட்ரெச்சர்களை தனியார் நிறுவன ஊழியர்கள் கட்டிட வேலைக்கு பயன்படுத்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் அவசர காலத்தில் நோயாளிகளை அழைத்துச் செல்லும் ஸ்ட்ரெச்சர்களை தனியார் நிறுவன ஊழியர்கள் கட்டிட வேலைக்கு பயன்படுத்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

author-image
WebDesk
New Update
strthchers

கோவை அரசு மருத்துவமனையில் அவசர காலத்தில் நோயாளிகளை அழைத்துச் செல்லும் ஸ்ட்ரெச்சர்களை தனியார் நிறுவன ஊழியர்கள் கட்டிட வேலைக்கு  பயன்படுத்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நோயாளியை கையில் சுமந்து சென்று போது, மருத்துவ கழிவுகளை ஸ்ட்ரெச்சரில் ஏற்றிச் சென்று  சர்ச்சை ஏற்படுத்தியது.

கோவை அரசு மருத்துவமனையில் கோவை மட்டுமல்லாமல் நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இருந்து சிகிச்சைக்கு ஆயிரக் கணக்கானோர் வந்து சிகிச்சைக்காக செல்கிறார்கள். இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் நாள்தோறும் சிகிச்சை பெற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மருத்துவமனைக்கு பாதுகாவலர்கள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் என கிறிஸ்டல் என்ற தனியார் நிறுவன ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அந்தத் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை அழைத்துச் செல்வதற்காக சக்கர நாற்காலிகள் மற்றும் ஸ்ட்ரக்சர்கள் உள்ளது. 

Advertisment
Advertisements

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் நோயாளி ஒருவரை அவரது மகன் அழைத்து வந்த போது, அவரை கொண்டு செல்ல ஸ்ட்ரக்சர் இல்லை என ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் அவரது தாயை கையில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குள் உள்ள படுக்கைக்கு கொண்டு சென்றார். அப்பொழுது அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அங்கு இருந்த ஸ்ட்ரக்சரில் மருத்துவக் கழிவுகளை ஏற்றிச் சென்ற செல்போன் காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று கோவை அரசு மருத்துவமனையில் பின்புறம் உள்ள (உடல்கூறு ஆய்வு மையம்) பிரேத பரிசோதனை கூடத்திற்கு செல்லும் வழியில் அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டு இருந்த ஒப்பந்த தனியார் நிறுவன ஊழியர்கள் . அங்கு நோயாளிகளை கொண்டு செல்லும் ஸ்ட்ரக்சரை கட்டிடக் கழிவுகளை எடுத்துச் செல்லும் செல்போன் காட்சி தற்பொழுது வெளியாகி உள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடக்க முடியாமல் மற்றும் படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாத நோயாளிகள் அழைத்துச் செல்வதற்கு கொடுக்கப்பட்ட சர்க்கரை நாற்காலி மற்றும் ஸ்ட்ரக்சர்களை இதுபோன்று பயன்படுத்திய வருவது அனைத்து தரப்பு மக்களிடத்திலும் முகம் சுளிக்க வைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: