New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/22/1GSMMiCBCrzmxw67iVnG.jpg)
புதுவை முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த ஜான் டி பிரிட்டோ- தீபிகா
புதுவை முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த ஜான் டி பிரிட்டோ- தீபிகா
தென்னை ஒலையில் பூக்கள் இணைத்து திருமண நிகழ்வு நடக்கும் கடலுக்கடியில் அமைத்து மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடல் மாசு விழிப்புணர்வு, கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு அவசியத்தை வலியுறுத்தி ஆழ்கடலில் திருமணம் புரிய முடிவு எடுத்தனர்.இதையடுத்து டெம்பிள் அட்வென்சர் ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் துணையுடன் இன்று புதுச்சேரி தேங்காய்திட்டில் இருந்து 5 கிமீ தொலைவில் கடலுக்கு சென்றனர்.
கடல் மாசு விழிப்புணர்வு: ஆழ்கடலில் திருமணம் செய்துகொண்ட புதுவை ஜோடி: வைரல் வீடியோ#viralvideo pic.twitter.com/h67IMgVNLB
— Indian Express Tamil (@IeTamil) January 22, 2025
அங்கு 50 அடி ஆழத்தில் திருமண ஏற்பாடு நடந்தது. தென்னை ஒலையில் பூக்கள் இணைத்து திருமண நிகழ்வு நடக்கும் கடலுக்கடியில் அமைத்து மோதிரம் மாற்றி திருமணம் புரிந்தனர். அவர்களுடன் ஆழ்கடலுக்குள் 5 பேர் உடன் சென்றனர்.
இதுகுறித்து ஆழ்கடல் பயிற்சியார் அரவிந்த் கூறுகையில், இது முதல்முறையாக நீருக்கடியில் திருமணம் நடந்தது. இவர்கள் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் என்பதால் இதில் சிரமம் ஏற்படவில்லை. முன் ஏற்பாடுகளுடன் சென்று திருமணம் புரிந்து முன்மாதிரியாக செயல்பட்டோம் என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.