New Update
![படிச்சு படிச்சு பைத்தியம் பிடிச்சுரும்... லீவு வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடமே இன்ஸ்டாவில் கேட்ட 2k கிட்ஸ்](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2022/10/768-512-12170753-thumbnail-3x2-pud.jpg)
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால், விடுமுறை வேண்டி இன்ஸ்டிராகிராமில் புதுக்கோட்டை ஆட்சியருக்கு 2-கே கிட்ஸ் மெலேஜ் அனுப்பி உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருப்பவர் கவிதா ராமு. இவர் அரசு பணிக்காக சமூகவலைதளத்தில் மும்மூராமக இயங்குபவர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக புதுக்கோட்டையில் மழை பொழிந்துள்ளது.மழைனா விடுமுறை வேண்டும் என்ற எண்ணம் யாருக்கத்தான் இருக்காது என்பதுபோல மாணவர்களும் ஆசைபட்டுள்ளனர். ஆனால் இதற்காக மாவட்ட ஆட்சியர் இன்ஸ்டா அக்கவுண்டை தேடி பிடித்து மெசாஜா அனுப்புவது. அதை செய்துள்ளனர்.
“மேடம் பிளீஸ் லீவு விடுங்க மாம்... உங்களுக்க்கு கோவில் கட்டுறேன். நாளை மட்டும் லீவு இல்லனா பைத்தியம் ஆயுடுவேன். படிச்சு படிச்சு பைத்தியம் புடிச்சுரும்போல இருக்கு மாம் லீவு விடுங்க”.. என்று தொடர்ந்து மெசேஜ் செய்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.