ரிடையர்டான நாளில் தன் கனவை நிறைவேற்றிய ஆசிரியர்... அட வாழ்க்கை வாழ்றதுக்கு தானங்க...
இந்த ஒரு ட்ரிப்புக்கு அவர் செலவிட்ட தொகை 4 லட்சமாம்...
Rajasthan Government School teacher books helicopter on his retirement day : ராஜஸ்தானை சேர்ந்த ஆசியரியர் ஒருவர் தன்னுடைய பணி ஓய்வு பெறும் நாளில், வீட்டுக்கு ஹெலிகாப்டரில் சென்று உள்ளார். ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் அமைந்திருக்கும் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றினார் ரமேஷ் சந்த் மீனா. அவருடைய வீடு, அவர் பணி புரியும் பள்ளியில் இருந்து 22 கி.மீ தொலைவில் உள்ளது.
அவருடைய வாழ்நாள் ஆசையெல்லாம், ஒரு நாளாவது ஹெலிகாப்டரில் பயணிக்க வேண்டும் என்பது தான். தன்னுடைய பணி ஓய்வு நாளான சனிக்கிழமையன்று (31/08/2019) ஹெலிகாப்டர் புக் செய்து, அதில் தன் மனைவி மற்றும் பேரனை அழைத்துக் கொண்டு, தன்னுடைய வீட்டின் முன்பு தரையிறங்கியுள்ளார் ரமேஷ் சந்த். தன்னுடைய ஆசை மட்டும் அல்ல அது. அது அவருடைய மனைவியின் ஆசையுமாம்.
Rajasthan Government School teacher books helicopter on his retirement day
34 வருடங்களாக அரசு பள்ளியில் சமூகவியல் துறை ஆசிரியராக பணியாற்றியுள்ளார். வெறும் 18 நிமிடங்கள் பயணத்திற்கு செலவிட்ட தொகை 4 லட்சமாம். இவரின் இந்த ஆசையை நிறைவேற்றியது சமூக வலைதளங்களில் பெரிய செய்தியாக மாற, நெட்டிசன்கள் அவருடைய செயலுக்கு பல்வேறு விதமான விமர்சனங்களை பதிவு செய்துள்ளனர்.
— Anish Singh Rathore???????? (@anishrajput278) August 31, 2019
Heplicopter ???? pic.twitter.com/FycSTzNBlQ
— Vivek Sahai (@vivek_sahai) September 1, 2019
Why not? Good for him! Everyone has the right to fulfil their dreams.
— Varrsha (@Varrsha2) August 31, 2019
Sabko apne sapne pure karne chahiye apni life me..????????????????
— Indian Kim Jong Un (@ChowkidarKim) August 31, 2019
Government teacher so much money to splurge unless his ancestors have left a fortune .
— R KRishna Kumar (@Kris0673) September 1, 2019
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook