Advertisment

தந்தை – மகன் பிரிவுக்கு மனைவி ரிவாபா காரணமா? வைரலாகும் ரவீந்திர ஜடேஜாவின் பழைய ட்வீட்

தந்தை - மகன் பிரிவுக்கு மனைவி ரிவாபா தான் காரணமா?; ’ஒருவர் தன் பெற்றோரை மதிப்பது எவ்வளவு முக்கியம்’; 2012 ஆம் ஆண்டு ரவீந்திர ஜடேஜா பதிவிட்ட பழைய ட்வீட் இணையத்தில் வைரல்

author-image
WebDesk
New Update
ravindra jadeja rivaba

மனைவி ரிவாபா உடன் ரவீந்திர ஜடேஜா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா சமீபத்தில் ஒரு நேர்காணலில் தந்தை- மகன் உறவில் ஏற்பட்ட விரிசல் குறித்து அவரது தந்தை வெளிப்படையாக பேசியதையடுத்து தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார். குஜராத்தி நாளிதழுக்கு பேட்டியளித்த ரவீந்திர ஜடேஜாவின் தந்தை அனிருத்சிங் ஜடேஜா, குடும்பத்தில் ஏற்பட்ட பிளவுக்கு தனது மகனின் மனைவி ரிவாபா தான் காரணம் என குற்றம் சாட்டினார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Ravindra Jadeja’s old tweet on parents goes viral amidst feud with father: ‘One who touches his parents foot daily….’

திருமணமாகி இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு பிரச்சினை தொடங்கியது. நான் தற்போது ஜாம்நகரில் தனியாக வசிக்கிறேன், ரவீந்திர ஜடேஜா தனி பங்களாவில் வசிக்கிறார். ரவீந்திர ஜடேஜாவும் ஜாம் நகரில் தான் வசிக்கிறார், ஆனால் நான் அவரைப் பார்க்கவில்லை. அவரது மனைவி என்ன மாயம் செய்துள்ளார் என்று தெரியவில்லை’’ என்று ரவீந்திர ஜடேஜாவின் தந்தை நேர்காணல் எடுத்த திவ்யா பாஸ்கரிடம் கூறினார்.

இந்தநிலையில், ​​​​2012 ஆம் ஆண்டு ரவீந்திர ஜடேஜா பதிவிட்ட பழைய ட்வீட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது, அதில் ஒருவர் தன் பெற்றோரை மதிப்பது எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி ரவீந்திர ஜடேஜா பேசுகிறார். "தினமும் தனது பெற்றோரின் பாதத்தைத் தொடுபவர், மற்றவர்களின் கால்களைத் தொடும் சூழ்நிலையை அவர் வாழ்க்கையில் எதிர்கொள்ள மாட்டார்" என்று ட்வீட் கூறுகிறது.

பழைய ட்வீட்டுக்கு பதிலளித்த ஒரு பயனர், “இது நாம் அனைவரும் விரும்பும் ஜட்டு, என்று கூறினார் மற்றொரு பயனர், "உங்களைப் போன்ற ஒரு பையன் தனது பெற்றோருக்கு எதிராக செல்வார் என்று கற்பனை செய்து பார்த்ததில்லை." என்று பதிவிட்டார்.

இருப்பினும், ரவீந்திர ஜடேஜா தனது தந்தையின் நேர்காணல் கவனத்தை ஈர்த்த பிறகு ஒரு தெளிவுபடுத்தலைப் பகிர்ந்து கொண்டார் மற்றும் அதை 'ஸ்கிரிப்ட்' என்று அழைத்தார். அவர் குஜராத்தியில் பகிர்ந்துள்ள குறிப்பில், “திவ்யா பாஸ்கரின் சந்தேகத்திற்குரிய நேர்காணலில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் அர்த்தமற்றவை மற்றும் பொய்யானவை. இது ஒருதலைப்பட்சமான கதை, நான் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுக்கிறேன். எனது மனைவியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது மற்றும் பொருத்தமற்றது. நானும் நிறைய சொல்ல வேண்டும், ஆனால் நான் அதை பகிரங்கமாக ஒளிபரப்ப மாட்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Ravindra Jadeja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment