ஆர்.சி.பி.யா? சி.எஸ்.கே.வா? நூதன பந்தயம் கட்டிய காதல் ஜோடி: கடைசியில் நடந்த ட்விஸ்ட்; வைரல் போட்டோஸ்!

சி.எஸ்.கே-ஆர்.சி.பி. போட்டியின்போது, காதல் ஜோடி நூதன பந்தயம் கட்டிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் காதலன் ”மிக சந்தோசமான மனிதன்” என்று பதிவிட்டு வருகின்றனர்.

சி.எஸ்.கே-ஆர்.சி.பி. போட்டியின்போது, காதல் ஜோடி நூதன பந்தயம் கட்டிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் காதலன் ”மிக சந்தோசமான மனிதன்” என்று பதிவிட்டு வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
csk vs rcb

ஆர்.சி.பி.யா? சி.எஸ்.கே.வா? நூதன பந்தயம் கட்டிய காதல் ஜோடி: கடைசியில் நடந்த ட்விஸ்ட்!

சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். போட்டி சனிக்கிழமை இரவு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஆர்.சி.பி. அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி பந்தில் வெற்றியை உறுதி செய்தது.

Advertisment

டாஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி தான் வெற்றி பெற்றார். பெங்களூரு மைதானம் சிறியது என்பதால் சேஸிங் செய்யலாம் என நினைத்து பவுலிங்கை முதலில் தேர்வு செய்தார். அதன்படி ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் ஆடியது. 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. அந்த அணியில் சிறப்பாக ஆடிய விராட் கோலி 62 ரன்களும், ஜேக்கப் பெத்தல் 53 ரன்களும் குவித்தனர். 

கடைசி 2 ஓவர்களில் ஆர்.சி.பி. அணியின் ரோமாரியோ ஷெப்பர்டு பேட்டிங்கில் ருத்ரதாண்டவம் ஆடினார். பேட்டில் பட்ட பந்துகள் எல்லாம் சிக்சர் பவுண்டரிகளுமாக பறக்க 13 பந்தில் அரைசதம் அடித்தார். மொத்தம் 14 பந்துகள் மட்டுமே ஆடிய ஷெப்பர்டு 6 சிக்சர்களும், 4 பவுண்டரிகளும் விளாசி 53 ரன்கள் குவித்தார். அதாவது சிஎஸ்கே அணி கடைசி 2 ஓவர்களில் 53 ரன்களை விட்டுக்கொடுத்தது. இதன்பிறகு பேட்டிங் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பதிலடி கொடுத்தது. ஆயுஷ் மான்ரே 93 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 77 ரன்களும் எடுக்க சென்னை அணி வெற்றிக்கு மிக அருகில் வந்தது. 20 ஓவர்களில் 211 ரன்கள் எடுத்து வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் சி.எஸ்.கே அணி தோல்வி அடைந்தது. . இதன்மூலம், இந்த தொடரில் 9-ஆவது தோல்வியை சென்னை சூப்பர் கிங்ஸ் தழுவியுள்ளது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது!

சி.எஸ்.கே - ஆர்.சி.பி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இரு அணிகளின் ரசிகர்களிடையே அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட போட்டியாகும். ஏனென்றால், ஐ.பி.எல். வரலாற்றில் ஆர்.சி.பி. அணி அதிகளவிலான தோல்விகளை சி.எஸ்.கே. அணியிடமே பெற்றிருக்கிறது. மறக்க முடியாத ஏராளமான தோல்விகளை ஆர்.சி.பி அணிக்கு சி.எஸ்.கே. அணி கொடுத்துள்ளது.

Advertisment
Advertisements

பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் சென்னை அணியை கிண்டல் செய்யும் வகையில் டீசர்ட் என்பது விற்பனை செய்யப்பட்டது. அதாவது சி.எஸ்.கே. அணிக்கு கடந்த 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் ஐ.பி.எல் தடை விதிக்கப்பட்டது. சென்னை அணி நிர்வாகம் மீதான ‛ஸ்பாட் ஸ்பிக்சிங்' புகாரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை குறிப்பிடும் வகையில்தான் கருப்பு, வெள்ளை நிறத்தில் டீசர்ட் பெங்களூரில் விற்பனை செய்யப்பட்டது. அதில் 2016-2017 என எழுதப்பட்டுள்ளது. சென்னை அணியை சீண்டும் வகையில் இடம்பெற்ற டீசர்ட்டை பலரும் வாங்கி பலரும் அணிந்து சென்றனர். 

சி.எஸ்.கே-ஆர்.சி.பி. போட்டியின்போது, காதல் ஜோடி பந்தயம் கட்டிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ஒருவேளை ஆர்.சி.பி. வெற்றி பெற்றால், அவள் தனது செல்போனில் உள்ள ஆண் நண்பர்களின் தொடர்பு எண்களை அழிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் பலகையை தூக்கியபடி காதலன் நின்றிருந்தார். அதன் அருகே, ஒருவேளை சி.எஸ்.கே. வெற்றி பெற்றால் எனது ஏஜியோ (Ajio) செயலியில் உள்ள என விருப்பங்களை அவர் வாங்கித் தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் பலகையை தூக்கியபடி காதலி நின்றிருந்தார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஆர்.சி.பி. 2 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. அன்னைக்கு ஆர்.சி.பி. அணி வீரர்கள் சந்தோஷப்பட்டதை விட இந்த காதலன்தான் அதிகம் சந்தோஷப்பட்டுருப்பான் என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அவன் ஏற்கனவே, சி.எஸ்.கே. தோல்வியடையும் என்று கணித்துள்ளான் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

இந்த உலகத்திலேயே ”லக்கி மேன்” ”சந்தோஷமான மனிதன்” என்றும், இருவருக்கும் விரைவில் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.

Csk Vs Rcb

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: