Advertisment

தாயுடன் சேர்த்து வைக்கும் முயற்சி தோல்வி: தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு அனுப்பபட்ட குட்டி யானை உற்சாகம்

கோவையில் தாய் யானையால் கை விடப்பட்ட குட்டியானை நீலகிரி முதுமலை யானைகள் முகாமில் வைத்து பராமரிக்கப்பட உள்ளது. அங்கு கொண்டு செல்லப்பட்ட யானை உற்சாகத்துடன் காணப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Ele Theppa.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோயம்புத்தூர் வனக்கோட்டம், கோவை வனச் சரகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தாய் யானை ஒன்று உடல் நலம் குன்றிய நிலையில் கீழே படுத்து இருந்தது.  அதன் அருகில் குட்டியானை ஒன்று இருந்தது. 

Advertisment

இதையடுத்து வனத்துறையினர் தாய் யானைக்கு சிகிச்சை அளித்தனர். சிகிச்சையின் போது தாயை சுற்றி சுற்றி வந்த குட்டியானை பின் வேறு ஒரு யானைக் கூட்டத்துடன் சென்றது. தாய் யானை குணமடைந்த நிலையில் வனத்துறையினர் அதை காட்டில் விட்டனர். 

Ele Theppa1.jpg

இந்தநிலையில் வேறு ஒரு யானைக் கூட்டத்துடன் சென்ற குட்டி யானை கூட்டத்தை விட்டு தனியாக வந்து விட்டது. இதையடுத்து வனத்துறையினர் குட்டியை மீட்டு தாய் யானை உடன் சேர்க்க முயற்சி செய்தார்கள். பலமுறை முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. குட்டி யானைக்கு 5 மாதம் இருக்கும் என்று கூறினர். 

Ele Theppa2.jpg

இந்தநிலையில் தற்போது அந்த குட்டி யானையை தலைமை வன உயிரின காப்பாளர் அவர்களின் ஆணைப்படி முதுமலை புலிகள் காப்பதில் இருக்கும் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு பராமரிப்பதற்காக  நேற்று கொண்டு வரப்பட்டது. 

Ele Theppa3.jpg

நீலகிரி முதுமலை யானைகள் முகாமிற்கு வந்த குட்டியானை மிகவும் உற்சாகமாக காணப்பட்டது. அதற்கு தேவையான பால், ஊட்டசத்துகள் கொடுத்து பூஜைகள் செய்து ஏற்கனவே பராமரிக்கப்பட்டு வந்த இரண்டு குட்டியானைகளின் மரக் கூண்டில் விடப்பட்டது.  இந்த குட்டியானையுடன் சேர்த்து யானைகள் முகாமில் தற்போது வளர்ப்பு யானைகளின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி: பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

     

    Elephant
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment