புதிய சுடுகாடு திறப்பு நிகழ்ச்சி; பீகாரில் தனது இறுதிச் சடங்கை நடத்திய ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி

இந்த இறுதிச் சடங்கை உண்மை என்று நினைத்த உள்ளூர்வாசிகள், அஞ்சலி செலுத்த பெருமளவில் கூடினர். ஆனால், அனைவருக்கும் ஆச்சரியம் காத்திருந்தது.

இந்த இறுதிச் சடங்கை உண்மை என்று நினைத்த உள்ளூர்வாசிகள், அஞ்சலி செலுத்த பெருமளவில் கூடினர். ஆனால், அனைவருக்கும் ஆச்சரியம் காத்திருந்தது.

author-image
WebDesk
New Update
Bihar man stages own funeral

சுடுகாட்டில், தன்னையே தீயிட்டுக் கொளுத்துவதற்குப் பதிலாக, மோகன் லால் தனது சொந்த இறுதிச் சடங்கான சடலத்தை ஏற்றிச் செல்லும் மூங்கில் பாடையை அடையாளமாக எரித்தார். Photograph: (Image Source: @sapnamadan/X)

பாரம்பரிய வெள்ளைச் சவத்துணியால் போர்த்தப்பட்டிருந்த இந்திய விமானப்படையின் ஓய்வுபெற்ற வாரண்ட் அதிகாரி மோகன் லால், கயா'வின் கோஞ்சி கிராமத்தில் தன் சொந்த இறுதிச் சடங்கை நடத்தினார். இது கிராம மக்களைத் திகைப்பில் ஆழ்த்தியது. சமுதாயத்திற்காகத் தான் கட்ட உதவிய சுடுகாட்டைத் திறந்து வைப்பதற்காக, மோகன் லால் இந்த நாடகத்தனமான செயலை அரங்கேற்றினார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

என்.டி.டிவி செய்தியின்படி, சடங்கு ஊர்வலம் அனைத்து வழக்குகளையும் பின்பற்றியது. மோகன் லாலின் இறுதி அா்த்தி என்று நம்பி கிராம மக்கள் "ராம் நாம் சத்யா ஹை" என்று முழக்கமிட்டபடி எடுத்துச் சென்றனர். இது உண்மையான மரணம் என்று நம்பி, உள்ளூர்வாசிகள் அஞ்சலி செலுத்த அதிக அளவில் திரண்டனர். ஆனால், ஊர்வலம் அந்த இடத்தை அடைந்தபோது, எதிர்பாராதது நடந்தது. லால் திடீரென எழுந்து அமர்ந்தார், இந்த இறுதிச் சடங்கு திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை வெளிப்படுத்தினார்.

“யார் உண்மையிலேயே என்மீது அக்கறை கொண்டுள்ளார்கள் என்பதை நான் பார்க்க விரும்பினேன்” என்று அவர் விளக்கினார்.

வீடியோவைப் பாருங்கள்:

Advertisment
Advertisements

சுடுகாட்டில், தன்னையே தீயிட்டுக் கொளுத்துவதற்குப் பதிலாக, மோகன் லால் தனது சொந்த இறுதி ஊர்வலத்தின் போது கட்டப்பட்ட அர்த்தியை (பாடை)  அடையாளமாக எரித்தார். அப்போது 'சல் உட் ஜா ரே பஞ்சி, அப் தேஷ் ஹுவா பேகானா' என்ற சோகமான பாடல் பின்னணியில் ஒலித்தது.

மழைக்காலங்களில் இறுதிச் சடங்குகளைச் செய்ய கிராம மக்கள் படும் சிரமங்களைக் கவனித்த மோகன் லால், முறையான தகன வசதியை உருவாக்க முன்வந்தார். தளத்தைத் திறந்து வைக்க அவர் இந்தத் தனித்துவமான வழியைத் தேர்ந்தெடுத்தார். தன் சொந்த அடையாள இறுதிச் சடங்கைப் முதல் சடங்காகப் பயன்படுத்தினார்.

“ஓய்வுக்குப் பிறகும், என் கிராமத்திற்கும் சமூகத்திற்கும் சேவை செய்ய விரும்பினேன்” என்று மோகன் லால் சொன்னதை என்.டி.டிவி மேற்கோளிட்டுள்ளது. “இது என்னுடைய இறுதிப் பயணம் என்று நம்பி கிராம மக்கள் என்னுடன் நடந்ததைக் கண்டபோது, என் இதயம் மகிழ்ச்சியால் நிரம்பியது.” என்று கூறினார்.

அந்தச் சிதை சாம்பலான பிறகு, பாரம்பரியப்படி அவை அருகிலுள்ள ஆற்றில் கரைக்கப்பட்டன. இந்த நிகழ்வை நிறைவு செய்யும் விதமாக, மோகன் லால் ஒரு சமூக விருந்துக்கு ஏற்பாடு செய்தார் என்று அந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: