New Update
/indian-express-tamil/media/media_files/2024/10/18/bMGNrEgcpjEBVNyFT8sa.jpg)
திருச்சி மாவட்டம், ஊத்துக்குளியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் சுப்பிரமணியம். பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தற்போது கோவை வடபள்ளி பகுதியில் வசித்து வருகிறார்.
இவரது வீடு அமைந்துள்ள பகுதி மருதமலை மற்றும் அதன் அடிவாரத்தையொட்டியுள்ளதால் அங்கு நிறைய மயில்கள் காணப்பகுகின்றன. இந்நிலையில், இவரது வீட்டிற்கு அடிக்கடி வரும் ஆண்மயில் ஒன்றிற்கு குகன் எனப் பெயர் வைத்து அழைக்கிறார். மேலும், இவரது வீட்டிற்குள் சாதாரணமாக நடந்து வரும் மயில், அங்கு வைக்கப்பட்டுள்ள உணவை சாப்பிட்டுச் செல்கிறது.
இதனை அவர் தனது செல்போனில் பதிவு செய்த கட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
வீடியோவைக் காண:
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.