New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/08/kovai-kattoor-ps.jpg)
பெண்ணிடம் இருந்து தங்கச் செயினை பறித்து சென்ற மர்ம நபர்கள், சி.சி.டி.வி அதிர்ச்சி வீடியோ
கோவை காந்திபுரம் பகுதியில் கடந்த 25-ம் தேதி வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
பெண்ணிடம் இருந்து தங்கச் செயினை பறித்து சென்ற மர்ம நபர்கள், சி.சி.டி.வி அதிர்ச்சி வீடியோ
கோவை காந்திபுரம் பகுதியில் கடந்த 25-ம் தேதி வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை நகரில் அதிகரித்து வரும் செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே கடந்த 25"ம் தேதி காந்திபுரம் பகுதியில் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த ஜானகி என்ற பெண்ணின் கழுத்தில் இருந்து 4 சவரன் தங்க செயினை பறித்து சென்ற சிசிடிவி காட்சகள் வெளியாகி உள்ளது.
இருசக்கர வாகனத்தில் காலை 7 மணியளவில் வந்த மர்மநபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஜானகியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
இதில் நிலை தடுமாறி கீழே குப்புற விழுந்த ஜானகி பின்னர் எழுந்து சுதாரிப்பதற்குள் அவர்கள் மர்மநபர்கள் தப்பி செல்கின்றனர். இந்த அதிர்ச்சியான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது.
இது குறித்து காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.