/indian-express-tamil/media/media_files/2025/08/28/monkey-instagram-2025-08-28-14-18-13.jpg)
இந்தப் படம் மெட்டா ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட பிரதிநிதித்துவப் படமாகும்.
உத்தரப் பிரதேசம் மாநிலம், அவுரையா மாவட்டத்தில், பள்ளி ஆசிரியர் ரோஹிதாஷ் சந்திரா, அன்றைய தினம் வங்கியில் இருந்து ரூ.80,000 பணத்தை எடுத்து தனது இரு சக்கர வாகனத்தின் சேமிப்புப் பெட்டியில் வைத்திருந்தார். அவர் அங்கிருந்து புறப்படுவதற்குள், ஒரு குரங்கு அவரது வாகனத்தின் மீது ஏறி, பணப்பையைத் தூக்கிச் சென்று ஒரு மரத்தின் மீது ஏறியது.
அந்தக் குரங்கு பணக்கட்டுகளை மரத்தின் உச்சியிலிருந்து வீசத் தொடங்கியது. இதைப் பார்த்த பொதுமக்கள் அதை எடுக்க அங்கும் இங்கும் ஓடினர். இது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோவில், கீழே நின்றிருந்த ஒருவர், "இது அவரது உழைப்புப் பணம், தயவுசெய்து அதை அவரிடம் திருப்பிக் கொடுங்கள்" என்று கத்துவது கேட்கிறது.
பொதுமக்களின் உதவியுடன், சந்திரா சுமார் ரூ.52,000 பணத்தை மீண்டும் பெற்றார். ஆனால், கிட்டத்தட்ட ரூ.28,000 காணாமல் போனது.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி, கேலி மற்றும் அனுதாப உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பயனர், “மக்கள் உண்மையிலேயே நேர்மையாகவும் நல்ல மனதுடனும் இருந்திருந்தால், பணத்தை உரியவரிடம் திருப்பிக் கொடுத்திருப்பார்கள். ஆனால், சிலர் இதை தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பாக நினைத்து பணத்தை எடுத்துக் கொண்டார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பயனர், “இது ராபின் ஹூட் குரங்கு” என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார்.
இப்படி நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஜூலை மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பதிவர் கோடைக்காலத்தில் பயணம் செய்தபோது, குரங்குகள் அவரது சாக்லேட் கேக், ஆரஞ்சு மற்றும் பிற உணவுப் பொருட்களைத் திருடிச் சென்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.