New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/11/oKlrhg8cs3FUM2FrsPiP.jpg)
ராட்வீலர் வகை நாய் கடித்து குதறியதில் பாம்பின் தலை வேறு வால் வேறு என தனித்தனியாக இருப்பதைக் காணலாம். (Image source: @lone_wolf_warrior27/Instagram)
ராட்வீலர் வகை நாய் கடித்து குதறியதில் பாம்பின் தலை வேறு வால் வேறு என தனித்தனியாக இருப்பதைக் காணலாம். (Image source: @lone_wolf_warrior27/Instagram)
ஒரு ராட்வீலர் நாய் ஒரு நாகப்பாம்பைத் தாக்கும் சில்லிட வைக்கும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் விரைவாக வைரலாகி ஒரு சூடான விவாதத்தைத் தூண்டியது. இன்ஸ்டாகிராம் ரீல் ஒரு தோட்டத்தில் செல்லப்பிராணி நாய்க்கும் பாம்புக்கும் இடையிலான பதற்றமான மோதலைப் படம்பிடித்துள்ளது.
இந்த காணொளி, உரிமையாளர் தோட்டத்திற்குள் நுழைந்து, நாய், பாம்பை நோக்கி ஆக்ரோஷமாக குரைப்பதைப் பதிவு செய்வதிலிருந்து தொடங்குகிறது. உரிமையாளர் நாயை அமைதிப்படுத்த முயற்சித்த போதிலும், அது அடங்கவில்லை, ஆனால். சில நொடிகளில் பாம்பை வேகமாகக் கடித்து குதறி இரண்டு துண்டாக்கிவிடுகிறது. இந்த வீடியோவின் இறுதியில் பாம்பின் தலை மற்றும் வால் துண்டிக்கப்பட்டு தனித்தனியாக இருப்பதைக் காணலாம். அதோடு விடாமல், ராட்வீலர் நாய், அந்த பாம்பின் தலையை வாயில் கவ்வி எடுத்து மேலும் கடித்துக் குதறுகிறது.
“ராட்வீலர் vs பாம்பு,” என்ற தலைப்பிடப்பட்டு வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவைப் பாருங்கள்:
57 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் கிட்டத்தட்ட 2 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ள நிலையில், இந்த வீடியோ ஒரு விவாதத்தைத் தூண்டியுள்ளது. பல சமூக ஊடக பயனர்கள் இந்த சம்பவம் நாய்க்கு ஆபத்தானதாக இருந்திருக்கலாம் என்று கவலை தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் நாகப்பாம்பைக் காப்பாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். “உங்கள் நாயைப் பயிற்றுவிக்க வேண்டும்ம், அது உங்கள் கட்டளையைக் கூட பின்பற்றவில்லை” என்று ஒரு பயனர் எழுதினார்.
“நீங்கள் கூகிளில் தேடினால் செய்தால், நாகப்பாம்பு குடும்பம் இனம் அதிக மரணத்தை ஏற்படுத்துவதில்லை. அவை பெரும்பாலும் உங்களை எச்சரிப்பவை அல்லது வெற்றாக கடிக்கும். அவை புத்திசாலித்தனமான பாம்பு இனங்களில் ஒன்றாகும். மேலும், காலை உணவாக விரியன் பாம்புகளை சாப்பிடுகின்றன (பெரும்பாலான மரணத்தை ஏற்படுத்துபவை விரியன் பாம்புகள்). எனவே, நீங்கள் ஒரு நாகப்பாம்பைப் பார்த்தால், அதைக் கொல்லாதீர்கள்” என்று மற்றொரு பயனர் கருத்து தெரிவித்தார்.
“இது மிகவும் தவறு!…நீங்கள் மீட்புக் குழுவை அழைத்து நாகப்பாம்பைக் காப்பாற்றலாம்” என்று மூன்றாவது பயனர் பதிலளித்தார். “மிகவும் துணிச்சலான நாய்” நான்காவது பயனர் குரல் கொடுத்தார்.
கடந்த வாரம், கேரளாவின் திருச்சூரில் 5 வயது ராட்வீலர் நாய் ஒன்று, இந்திய நாகப்பாம்பிடமிருந்து தனது உரிமையாளரையும் குடும்பத்தினரையும் காப்பாற்றிய பின்னர் இறந்தது. மனோரமாவில் வெளியான செய்திப்படி, தாக்குதலின் போது பாம்பு நாயைக் கடித்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.